முஸ்­லிம்கள் புனித மக்­கமா நக­ரி­லுள்ள கஃபா­விற்கு சென்று மகிந்த அர­சாங்கம் மாற வேண்டும் என்று பிரார்த்­த­னையில் ஈடு­பட்­டார்கள்.

Marsook Hahamed Labbai முன்னாள் நகர பிதா, காத்தான்குடி. முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ பிரான்ஸ் ஊட­க­மொன்­றிற்கு வழங்­கிய ப...

முன்னாள் நகர பிதா, காத்தான்குடி.

முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ பிரான்ஸ் ஊட­க­மொன்­றிற்கு வழங்­கிய பேட்­டியில் அவ­ரது தோல்­விக்கு பொது­பல சேனாவே கார­ண­மாக அமைந்­த­தா­கவும் இதனால் முஸ்­லிம்­களின் வாக்­குகள் இழக்­கப்­பட்­ட­தா­கவும் கூறி­யி­ருக்­கின்றார். நோர்வே பொது­பல சேனா ஊடாக முஸ்­லிம்­களை தன்­னி­ட­மி­ருந்து பிரித்­து­விட்­டது என்­றி­ருக்­கின்றார். இவர் கண்­கெட்ட பின் சூரிய நமஸ்­காரம் செய்­கின்றார்.

“மகிந்­தவின் வெற்­றிக்­காக பொது­பல சேனா பல சோத­னை­க­ளுக்கும் எதிர்ப்­புக்­க­ளுக்கு மத்­தியில் செயற்­பட்­டது. ஆனால் அவர் தோற்­று­விட்டார். அவர் பொது­பல சேனாவின் செயற்­பா­டுகள் கார­ண­மா­கவே தோற்­றுப்­போ­ன­தாக ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருப்­பது எமக்கு கவ­லை­ய­ளிக்­கின்­றது.

மகிந்­தவை 2 வரு­டங்­க­ளுக்கு முன்பே தேர்­தலை நடத்­து­மாறு நாமா கூறினோம்? அவர் அவ­ச­ரப்­பட்டு முடி­வெ­டுத்தார். இனிமேல் நாங்கள் அவ­ருக்கு பின்னால் செல்­லப்­போ­வது இல்லை” என பொது­பல சேனாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­தி­ருக்­கின்றார். 



முஸ்­லிம்­களின் மத உரி­மை­களில் சீண்­டினால் எவ்­வா­றான பார­தூ­ர­மான விளை­வு­களை சந்­திக்க வேண்­டி­வரும் என இன்று இவர்கள் உணர்ந்­தி­ருக்­கின்­றார்கள்.

பொது­பல சேனா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ருத்ர தாண்­டவம் ஆடும் போது மகிந்த அதனை தட்­டிக்­கேட்­க­வில்லை. மாறாக நியா­யப்­ப­டுத்­தியே கதைத்து வந்தார். இது ஒரு சிறிய பிரச்­சினை... இதனை பெரிது படுத்­தா­தீர்கள் என முஸ்லிம் அமைச்­சர்­க­ளிடம் கூறினார். 

மனி­தர்­க­ளுக்கு உணவும், உடையும், வீடும் தான் அத்­தி­யா­வ­சி­ய­மா­னது. இதிலே முஸ்­லிம்­களின் உண­விலும், உடை­யிலும் கை வைத்­தார்கள். முஸ்­லிம்கள் ஹலா­லான உணவை சாப்­பிட முடி­ய­வில்லை. தமது மத ரீதி­யான உடையை அணிய முடி­ய­வில்லை.

பள்­ளி­வா­யல்கள் தாக்­கப்­பட்டு குர்ஆன் கொச்­சைப்­ப­டுத்­தப்­பட்­டன. முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு தாக்­கப்­பட்­டன. முஸ்லிம் வர்த்­தகர் ஒரு சிங்­கள யுவ­தி­யுடன் அல்­லது சிங்­கள சிறு­வ­னுடன் துஸ்­பி­ர­யோ­கத்தில் ஈடு­பட்டார் என சோடிக்­கப்­பட்டு வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்­டன.

குற்­றச்­சாட்­டுகள் சோடிக்­கப்­ப­டாமல் உண்­மை­யாக நடந்­தி­ருந்தால் கூட அதனை ஒரு பாலியல் பிரச்­சி­னை­யாக பார்த்­தி­ருக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். மாறாக இது இனப்­பி­ரச்­சி­னை­யாக்­கப்­பட்டு பூதா­க­ர­மாக்­கப்­பட்­டி­ருக்க தேவை­யில்லை. பாலியல் குற்­றத்­திற்­கு­ரிய சட்­டத்தின் கீழ் நீதி­மன்­றத்தில் விசா­ரிக்­கப்­பட்டு தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். 

ஆனால் இன்று முஸ்­லிம்­க­ளினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஆட்சி மாற்­ற­மா­னது பொது­பல சேனா போன்­ற­வர்­களை எவ்­வாறு கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை நாங்கள் உற்று நோக்க வேண்டும். அண்­மையில் கூர­கல பள்­ளி­வா­யலை உடைக்­கச் ­சென்­ற­வர்கள் மீது தண்ணீர் பிர­யோகம் மேற்­கொண்டு பொலிஸார் விரட்டி அடித்­தி­ருக்­கின்­றனர். மகிந்த அர­சாங்க காலத்தில் இது நடை­பெற்­றி­ருக்­குமா? “நாங்கள் தான் உத்­தி­யோ­கப்­பற்­றற்ற பொலிஸ்” என கூறிக்­கொண்டு பொது­பல சேனா போன்­ற­வர்கள் விரும்­பிய இடத்­திற்கு செல்­வார்கள்.

விரும்­பிய முஸ்லிம் அமைச்­சுக்கு சென்று நட­வ­டிக்கை எடுப்­பார்கள். தெரு­விலே ஒரு முஸ்­லிமின் இறைச்சிக் கடையை கண்டால் அக்­கடை உடைக்­கப்­பட்டு கடைக்­காரர் நையப்­பு­டைக்­கப்­பட்டு கேவ­லப்­ப­டுத்­தப்­ப­டுவார். இதனை எந்த பொலிசும் கேட்­க­ மு­டி­யாது. ஆனால் ஆட்சி மாற்­றத்தின் பின்பு இன்று குர்­ஆனை அவ­ம­தித்­தமை தொடர்­பான வழக்கில் ஞான­சார தேரர் முதன் முறை­யாக நீதி­மன்ற கூண்டில் ஏற்­றப்­பட்­டி­ருக்­கின்றார். 

ஜன­வரி 09 ஆம் திகதி தேர்தல் முடிந்த மறு­தினம் மகிந்த தோல்வி அடைந்த நிலையில் அன்று அதி­காலை 6.30 மணிக்கு அல­ரி ­மா­ளி­கையை பிர­தமர் ரணி­லிடம் ஒப்­ப­டைத்­து­விட்டு அங்­கி­ருந்து வெளி­யேறும் போது அன்று அதி­காலை சதிப்­ பு­ரட்சி சம்­பந்­த­மாக ஆராய வந்­த­வர்­க­ளிடம் அதிலும் குறிப்­பாக முன்னாள் பொலிஸ்மா அதி­ப­ரிடம் மகிந்த இப்படிக் கூறி­யி­ருக்­கின்றார்.

 “எனது தம்­பி­மார்கள் இரு­வரும் காவி உடை தரித்த பொது­பல சோனா­வி­னரை எனது அல­ரி­மா­ளி­கைக்குள் கொண்டு வந்து அமர்த்­தி­ய­தனால் தான் இன்று இங்­கி­ருந்து நான் வெளி­யேறி செல்­ல­வேண்­டிய நிலமை ஏற்­ப­டு­கி­றது” என்­றி­ருக்­கின்றார். 

அன்று தேர்­தலில் தோற்­று­விட்டு அல­ரி­மா­ளி­கையில் இருந்து வெளி­யேறும் போது ஒரு சில­ரிடம் கூறி­யதை இன்று பிரான்ஸ் ஊட­கத்தின் ஊடாக உல­கத்­திற்கு வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். அதா­வது தனது தோல்­விக்கு முஸ்­லிம்கள் தான் காரணம். அதற்கு பொது பல­சேனா காரணம் என்றே அவர் சொல்லியிருக்கிறார். 

முஸ்­லிம்கள் மகிந்­தவை தோற்­க­டிப்­பது என்­பதை ஒரு ஈமா­னிய புரட்­சி­யா­கவே பார்த்­தார்கள். ஏனெனில் இலங்கை இருக்­கின்ற வரை ஜனா­தி­பதி முறைமை இந்த நாட்டில் இருக்கும். இலங்கை இருக்­கின்­ற­வரை முஸ்­லிம்­களும் இந்த நாட்டில் வசிப்­பார்கள். எனவே மகிந்­த­வுக்கு படிப்­பிக்­கின்ற பாடத்­தினால் எதிர்­கா­லத்தில் வரு­கின்ற மைத்­திரி உட்­பட எந்த ஜனா­தி­ப­தி­யாக இருந்­தாலும் ஒரு பாடத்­தினை படித்­துக்­கொள்ள வேண்டும் என்­றுதான் முஸ்­லிம்கள் விரும்பியிருந்­தார்கள். 

முஸ்­லிம்கள் புனித மக்­கமா நக­ரி­லுள்ள கஃபா­விற்கு சென்று மகிந்த அர­சாங்கம் மாற வேண்டும் என்று பிரார்த்­த­னையில் ஈடு­பட்­டார்கள். முஸ்­லிம்கள் நோன்பு நோற்­றார்கள். இக்­கட்­டுரை எழுதும் நான் கூட நோன்பு நோற்­றவன் தான். 

எனக்கு அண்­மையில் மரணம் வரும் என்று விதி இருந்தால் அது ஜனா­தி­பதி தேர்­தலின் பின்­புதான் வர­வேண்டும். மகிந்­தவின் தோல்­வியை பார்த்­து­விட்­டுத்தான் நான் மர­ணிக்க வேண்டும் என நான் விரும்­பி­யி­ருந்தேன். 

ஆனால் சில முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் மகிந்­தவை ஆத­ரித்­தார்கள். அதற்கு அவர்கள் “எல்லா முஸ்­லிம்­களும் மகிந்தவை எதிர்த்து நின்று வாக்­க­ளித்தும் அதையும் தாண்டி மகிந்த வென்­று­விட்டால் முஸ்­லிம்­களின் கெதி­யென்ன? அவ்­வா­றான நில­மையில் முஸ்­லிம்­களை பாது­காக்­கவே மகிந்த தேர்­தலில் மகிந்­தவை ஆத­ரித்தோம்” என்­கின்­றனர். 

ஆனால் இவர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு பாரிய பிரச்­சி­னைகள் வந்­த­போது ஒரு போதும் குரல் கொடுத்­தது கிடை­யாது. சமூகம் எக்­கேடு கெட்­டாலும் பர­வா­யில்லை எமது பிழைப்பு நடந்தால் போதும் என்று கடந்த காலத்தில் இருந்­த­வர்கள் தான் இவர்கள்.

அவ்­வாறு இவர்கள் கூறு­வது போல் மகிந்த வென்­றி­ருந்­தாலும் இவர்கள் பட்டம் பத­வி­களை எடுத்­துக்­கொண்டு  முஸ்­லிம்­களை காட்­டிக்­கொ­டுக்­கின்ற வேலை­க­ளையே செய்­தி­ருப்­பார்கள். ஒரு போதும் சமூ­கத்தை பாது­காத்­தி­ருக்க மாட்­டார்கள். 

எல்லா முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் மகிந்­த­வுக்கு எதி­ராக வேலை செய்­கின்ற போது நாங்கள் மட்டும் மகிந்­த­வுக்கு வேலை­செய்து மகிந்த வென்­று­விட்டால் மகிந்த அர­சாங்­கத்தில் நாங்கள் தான் ராசா வேண்­டிய பத­வி­களை அடை­யலாம் என்ற சுய­நலம் தான் முஸ்­லிம்­க­ளுக்கு அநி­யாயம் செய்த மகிந்­தவை இவர்கள் ஆத­ரித்­ததன் நோக்கம்.

அவ்­வாறு மகிந்த வென்­றி­ருந்­தாலும் இவர்கள் எதிர்­பார்த்த முழு அமைச்சர் பத­வியை மகிந்த வழங்­கி­யி­ருப்­பாரா என்­பதும் சந்­தேகம். ஏனென்றால் மகிந்த ஒரு நன்றி கெட்ட மனிதர்.

மேலும் சில அர­சி­யல்­வா­திகள் “நாங்கள் மகிந்­தவை ஆத­ரித்­ததன் நோக்கம் எங்கள் ஊருக்கு வடிகாலமைப்பு திட்டம் தந்­த­தற்கு நன்றி தெரி­விக்கவே” என்­கின்­றனர். 

இலங்கை முஸ்­லிம்­களின் தேசிய அழி­வுக்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­பதா? அல்­லது தனது ஊருக்கு தந்த வடிகாலமைப்பு திட்­டத்­திற்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­பதா? முஸ்­லி­களின் பிரச்­சி­னை­க­ளோடு ஒப்­பிடும் போது இத் திட்­ட­மெல்லாம் ஒரு தூசு. இவ்வாறான திட்­டங்களுக்காக நாம் சோரம் போக­லாமா? 

சரி. மகிந்­தவின் வெற்­றிக்­காக உழைத்து தோல்­வியும் கண்­டீர்கள். நன்றி தெரி­விப்­ப­தற்­கா­கவோ சமூ­கத்தை காப்­ப­தற்­கா­கவோ மகிந்­த­வுடன் நின்றேன் என்­கி­றீர்கள். அத­னோடு விட­யத்தை விட்­டு­வி­ட­லாமே. அத்­தோ­டு­வி­டாமல் மகிந்­தவை இலஞ்ச உழல் விசா­ர­ணைக்கு அழைத்­த­மைக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்தில் ஏன் கலந்து கொண்­டீர்கள்?

மகிந்த மீண்டும் ஆட்­சியைப் பிடித்து விடு­வாரோ? என்று முஸ்லிம் சமூ­கமே பயந்து போயி­ருக்­கின்ற இந்த சூழ­லிலே மகிந்­த­வுக்கு ஆத­ரா­வாக ஆர்ப்­பாட்­டத்தில் கலந்து கொண்டு மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் ஏன் மீண்டும் மீண்டும் நோண்­டி­யா­கு­கின்­றீர்கள்?

மகிந்த சகோ­த­ரர்கள் பொது  பல­சே­னா­வூ­டாக முஸ்­லிம்­களை அடித்து நொறுக்­கு­வ­தைப்­பார்த்து சிங்­கள பௌத்­தர்கள் தங்­க­ளுக்கு பின்னால் அணி திரள்­வார்கள். அவ்­வாறு சிங்­க­ள­வர்கள் எல்லாம் தங்கள் பின்னால் அணி திரண்டால் முஸ்­லிம்­களின் வாக்­குகள் தங்­க­ளுக்கு தேவைப்­ப­டாது என எதிர்­பார்த்தே இதனை அரங்­கேற்­றி­னார்கள்.

ஆனால் இதற்கு சிங்­கள மக்­க­ளி­ட­மி­ருந்து ஆத­ரவு கிடைக்­க­வில்லை. மாறாக எதிர்ப்பே கிடைத்­தது. பெரிய பிக்­குகள் கூட பொது­ப­ல­சே­னாவை எதிர்த்து அறிக்­கைகள் விட்­டார்கள். இரண்டு பௌர்­ண­மிக்குள் பொது­ப­ல­சேனா அழிந்­து­விடும் என சில முக்­கிய பிக்­குகள் சாபம் இட்­டார்கள். சாதா­ரண சிங்­கள மக்கள் மத்­தியில் இருந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இந்த நட­வ­டிக்­கை­ளுக்கு எதிர்ப்பு கிடைத்­தது. 
அளுத்­கம கல­வ­ரத்தை இந்த நாடு முழு­வதும் பர­வச்­செய்­யலாம் என எதிர்­பார்த்­தனர். ஆனால் சாதா­ரண சிங்­கள மக்கள் அதற்கு இட­ம­ளிக்­க­வில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­ளுக்கு சிங்­கள மக்கள் மத்­தியில் இருந்து இவ்­வ­ளவு எதிர்ப்பு வரும் என்­பது மகிந்த சகோ­த­ரர்கள் அறவே எதிர்­பார்க்­காத விடயம். இவ்­வாறு சிங்­கள பௌத்­தர்கள் மத்­தியில் இந்த பருப்பு வேகா­த­தால்தான் மகிந்த சகோ­த­ரர்கள் எதிர்­பார்த்த மாதிரி சிங்­கள வாக்­கு­களை பெற­மு­டி­ய­வில்லை.

ஆனால் இது வெற்றி அளித்து அதி­க­மான சிங்­கள வாக்­கு­களை மகிந்த பெற்­றி­ருந்தால் இன்று “முஸ்­லிம்­க­ளால்தான் தோல்வி அடைந்தேன்” என்று மகிந்த புலம்­ப­மாட்டார். இன்று மகிந்­த­வுக்கும் பொது­ப­ல­சே­னா­விற்கும் பிரச்­சினை ஏற்­பட்­டி­ருக்­க­மாட்­டாது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரியின் வெற்­றிக்கு முஸ்­லிம்­களா? அல்­லது சிறு­பான்மை மக்­களா? அல்­லது சிங்­க­ள­வர்­களா? காரணம் என்றால் இதற்கு முஸ்­லிம்­கள்தான் காரணம் என்றே கூற­வேண்டும். ஒரு காலத்­திலும் இல்­லா­த­வாறு முஸ்­லிம்கள் ஒன்று திரண்டு மைத்­தி­ரியை வெற்­றி­பெறச் செய்­தார்கள். முஸ்­லிம்கள் வாழ்­கின்ற அனைத்து தேர்தல் தொகு­தி­க­ளிலும் மைத்­திரி வெற்றி பெற்­றி­ருந்தார்.

ஆனால் தமி­ழர்­களும் உணர்வு பூர்­வ­மாக, ஒற்­று­மைப்­பட்டு வாக்­க­ளித்­தி­ருந்­தனர். அத­னையும் நாங்கள் குறைத்து மதிப்­பிட முடி­யாது முஸ்­லிம்கள் 97 வீதம் மைத்­தி­ரிக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள் என்று சொன்னால் தமி­ழர்கள் 99  வீதம் மைத்­தி­ரிக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். 

ஆனால் நான் இங்கு ஒரு விட­யத்தை குறிப்­பிட வேண்டும். மகிந்த கடந்த 3 ஜனா­தி­பதி தேர்­தல்களில் போட்­டி­யிட்­டுள்ளார். இந்த 3 தேர்­த­ல்களிலும் தமி­ழர்கள் மகிந்­த­வுக்கு எதி­ரா­கவே வாக்­க­ளித்­தார்கள்.  

2005 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­த­லிலே தமி­ழர்கள் ரணி­லுக்கு வாக்­க­ளிக்க ஆயத்­த­மா­னார்கள். இதனை அறிந்த புலிகள் வாக்­க­ளிக்க விடாமல் தமிழ் மக்­களை தடுத்­தார்கள். எனவே இத்­தேர்­தலில் தமி­ழர்கள் மகிந்­த­வுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை. 2010 ஆம் ஆண்டு தேர்­தலில் தமி­ழர்கள் பீல்ட் மார்ஸல் சரத் பொன்­சே­கா­வுக்கு வாக்­க­ளித்­தார்கள். 2015 ஆம் ஆண்டு தேர்­த­லி­லேயும் தமி­ழர்கள் மகிந்­த­வுக்கு வாக்களிக்கவில்லை. 

எனவே தமிழர்கள் மகிந்தவுக்கு எதிராக வாக்களித்தும் இரண்டு தேர்தல்களிலும் அவர்களால் மகிந்தவை தோற்கடிக்க முடியவில்லை. ஆனால் முஸ்லிம்கள் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மாத்திரம் தான் ஒற்றுமைப்பட்டு மகிந்தவுக்கு எதிராக வாக்களித்து மகிந்தவை தோற்கடித்தார்கள். 

எனவே மகிந்தவின் தோல்வியில் தமிழர்களை விடவும் முஸ்லிம்கள் ஒரு படி மேலேயே நிற்கின்றனர். இந்த தேர்தலில் தீர்மானிக்கின்ற சக்தியாக முஸ்லிம்களே திகழ்ந்தனர். 

சிலர் 40 இலட்சம் மைத்திரிக்கு வாக்களித்த சிங்களவர்கள் மைத்திரியின் வெற்றியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கவில்லையா என கேள்வி கேட்கின்றனர். சிங்கள மக்கள் மைத்திரிக்கு அளித்த 40 இலட்சம் வாக்கானது அவரின் அடிப்படை வாக்குகளாகும்.

இதனை வைத்து தீர்மானிக்கின்ற சக்தியை தீர்மானிப்பதில்லை. தீர்மானிக்கும் சக்தி என்பது வேறு விடயம். மேலும் மகிந்த “நான் சிங்கள மக்களாலும் தான் தோற்கடிக்கப்பட்டேன்” என எந்த இடத்திலும் இதுவரை கூறவில்லை.

 எனவே மைத்திரியின் வெற்றியை தீர்மானித்தவர்கள் முஸ்லிம்கள் தான். இதற்கு காரணம்  மகிந்த கூறுவது போல் பொதுபலசேனாதான்.

Related

இலங்கை 732383297320090276

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item