கல்கிஸ்சை கடலில் மூழ்கி காணாமற்போன இரு மாணவர்களில் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு
கல்கிஸ்சை கடலில் குளிப்பதற்காக சென்று காணாமற்போன இரண்டு மாணவர்களில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தெஹிவளை – அத்திடிய பிரதேசத்தை ...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_342.html

கல்கிஸ்சை கடலில் குளிப்பதற்காக சென்று காணாமற்போன இரண்டு மாணவர்களில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தெஹிவளை – அத்திடிய பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் நேற்று (23) பிற்பகல் கல்கிஸ்சை கடலில் குளிக்கச் சென்றிருந்தனர் .
இவர்களில் இருவர் அலையில் அள்ளுண்டு சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடற்படையினரின் ஒத்துழைப்புடன் காணாமற்போன மாணவர்களை தேடும் நடிவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இன்று (24) அதிகாலை மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate