மஹிந்தவின் வருகை நாட்டுக்கு நல்லதல்ல : அஜித் மானப்பெரும

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வருகை நாட்­டிற்கு நல்­ல­தல்ல. அவருக்கு ஒரு போதும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வேட்­பு­மனு வழங...


முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வருகை நாட்­டிற்கு நல்­ல­தல்ல. அவருக்கு ஒரு போதும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வேட்­பு­மனு வழங்க மாட்டார். இருந்த போதிலும் மஹிந்த ராஜபக் ஷ மீளவும் அர­சி­ய­லுக்கு வரு­கைக்கு தரும் விட­யத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி தலை­யிடப் போவ­தில்லை என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஜித் மா­னப்­பெ­ரும தெரி­வித்தார்.

மேலும் மஹிந்த ராஜ­பக் ஷவின் ஆசிர்­வா­தத்தை கொண்டு அர­சியல் செய்­வ­தற்கு இட­ம­ளிக்க மாட்­டோம். நிதி மோசடி விசா­ரணை பிரிவின் பெயரை கேட்­டாலே கொள்­ளை­யர்கள் விடு­தலைப் புலி­களின் கபிர் ஆயுத விமா­னத்­திற்கு பயந்து நடுங்­கு­வ­தனை போன்று நடுங்­கு­கின்­றனர் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் அங்கு குறிப்­பி­டு­கையில்,

முன்­னைய ஆட்­சியின் போது மக்­க­ளு­டைய பணத்தைக் கொண்டு அபி­வி­ருத்­திக்கு நிதி ஒதுக்­கீடு செய்­வ­தற்கு பதி­லாக பாரி­ய­ளவில் கொள்­ளை­யிட்­டனர். இதற்­க மைய அரச நிறு­வ­னங்­க­ளுக்கு சொந்­தமான பணத்தை ராஜ­ப­க் ஷவின் குடும்­பத்தின் வர­ப்பி­ர­சா­தங்­க­ளுக்கு மாத்­திரம் பிர­யோ­கித்­துள்ளனர்.

இதன்­படி ஸ்ரீலங்கா டெலிகொம், லொத்தர் சபை போன்ற அரச நிறு­வ­னங்­களின் இலா­பங்கள் அனைத்தையும் நாமல் ராஜ­பக் ஷவின் எதிர்க்­கால அர­சி­ய­லுக்கு செல­விட்­டுள்­ளனர். முன்­னைய ஆட்­சியின் போது மக்கள் பணத்தைக் கொள்­ளை­யிட்டோர் தொடர்பில் சுயா­தீ­ன­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கிறோம். விசா­ர­ணையின் முடிவில் நிச்­ச­ய­மாக குற்­ற­வா­ளிகள் தண்­ட­னையை அனு­ப­விப்­பார்கள்.

மக்­களின் பணத்தைக் கொள்­ளை­யிட்டோர் தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்­காக நிதி மோசடி விசா­ரணை பிரி­வினை நிறு­வினோம். இந்­நி­லையில் தற்­போது நிதி மோசடி விசா­ரணை பிரிவின் பெயரை கேட்­டாலே கொள்­ளை­யர்கள் விடு­தலைப் புலி­களின் கபிர் ஆயுத விமா­னத்­திற்கு பயந்து நடுங்­கு­வ­தனை விடவும் அஞ்சுகின்­றனர். இந்­நிை­லையில் இலங்கை லொத்தர் சபையின் 38 கோடி ரூபா­விற்கு என்ன நடந்­தது என்­பது கூட தெரி­யாமல் உள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் ஆட்­சியின் போது முன்­னெ­டுக்­கப்­பட்ட மோச­டிகள் பெரும்­பா­லா­னவை தொடர்ந்தும் வெளிவந்து கொண்டே இருக்கும்.

ஆகவே குறித்த மோச­டிகள் தொடர்பில் நிதி மோசடி பிரி­விடம் பொறுப்பை ஒப்­ப­டைத்து சுயா­தீன விசா­ர­ணையை ஆரம்­பித்து குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுப்போம்.

இதே­வேளை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வருகை தர­போ­வ­தாக செய்­திகள் வெளியான வண்ணம் உள்­ளன. முன்னாள் ஜனா­தி­ப­தி மீளவும் அர­சி­ய­லுக்கு பிர­வே­சிப்­பது நாட்­டிற்கு நல்­ல­தல்ல. எவ்­வா­றா­யினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவருக்கு வேட்­பு­மனு வழங்க மாட்டார் என்றார்.

Related

இலங்கை 1719742515156815257

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item