நாட்குறிப்புகள் அச்சிட 14 மில்லியன் மாத்திரமே செலவிடப்பட்டன!– தேசிய சுதந்திர முன்னணி

முன்னாள் வீடமைப்பு அமைச்சராக விமல் வீரவன்ச செயற்பட்ட போது கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் 140 மில்லியன் ரூபா பெறுமதியான நாட்குறிப்புகள் ம...

முன்னாள் வீடமைப்பு அமைச்சராக விமல் வீரவன்ச செயற்பட்ட போது கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் 140 மில்லியன் ரூபா பெறுமதியான நாட்குறிப்புகள் மற்றும் நாட்காட்டிகள் அச்சிடவில்லை என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் முஸ்ஸமிலின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

14 மில்லியன் மாத்திரமே அச்சிடும் நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தேசிய சுதந்திர முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த நாட்குறிப்புகள் மற்றும் நாட்காட்டிகளில் அதிகமானவைகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை அரச பொறியியல் சபை உட்பட அமைச்சுகளுடன் இணைந்த பிற அரச நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்ததாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

தலைப்பு செய்தி 1729317495211170325

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item