மைத்திரியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஹம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது பாதுகாப்பிற்கு பங்கம் ...


ஹம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பாளர் ஒருவரான இராணுவ சிப்பாய் துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்துக்கொண்டு நுழைய முடியாத இடத்தில் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளை விழிப்புணர்வு செய்யும் முகமாகவே ஜனாதிபதி இச்சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் குறித்த இராணுவ சிப்பாயை போதுமான அளவு சோதனையிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிப்பாய் ஜனாதிபதி அருகில் நெருங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி வருகை தரும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சாதாரண பொலிஸ் பாதுகாப்பிற்கு பதிலாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினால் பூரன சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த சம்பவம் இடம் பெற்ற சந்தர்ப்பத்தில் துப்பாக்கியுடன் இனங்காணப்பட்ட நபரை வெளியேற்றியுள்ளதுடன் அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றன.

Related

இலங்கை 8126532108854153841

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item