இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டால் 2 வருட சிறை?
இன, மதவாதக் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. அமைச்சரவையில...
http://kandyskynews.blogspot.com/2015/04/2.html

அமைச்சரவையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு அமைவாக, இனவாதம் மற்றும் மதவாதம் போன்றவற்றைத் தோற்றுவிக்கும் வகையிலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால் அது தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் குற்றமாகக் கருதப்படும்.
அவ்வாறு கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate