சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் பொறுப்பு சந்திரிகாவிடம்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள தீர்மா...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_892.html

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். தற்போது வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எதிர்வரும் 19ம் திகதி நாடு திரும்பியதும் குறித்த பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு திரும்பியவுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாகவும் வேட்பு மனு தாக்கல் வாரியம் அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மோசடி மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு இம்முறை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாதென கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் கலந்துரையாடப்படவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
|


Sri Lanka Rupee Exchange Rate