தாக்குதலில் ஈடுபட்ட காவற்துறையினர்க்கு ஐந்தாண்டு சிறை!!

எந்தக் காரணமும் இல்லாமல் மிக்கேய்ல் எனும் இளைஞனை மோசமான வன்முறையுடன் தாக்கிய குற்றத்தடுப்புப் பிரிவின் (Brigade anti-criminalité - BAC) க...

எந்தக் காரணமும் இல்லாமல் மிக்கேய்ல் எனும் இளைஞனை மோசமான வன்முறையுடன் தாக்கிய குற்றத்தடுப்புப் பிரிவின் (Brigade anti-criminalité - BAC) காவற்துறை அதிகாரி ஒருவரிற்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதில் மூன்று வருடங்கள் கடுங்காவற்சிறைத் தண்டனை என சம்பெரி நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது. இவரது தீர்ப்பு கடந்த நான்காம் திகதி அறிவிக்கப்பட்டது.
 23ம் திகதி ஏப்ரல் மாதம் 2010ஆம் ஆண்டு, இரவு, இந்தத் தண்டனை பெற்ற நபராலும் அவரது சகாக்களாலும் அவர்களின் காவற்துறைத் தாக்குதல் சுத்தியல் போன்ற தடியினால் (matraque), இந்த இளைஞன் பலத்த தாக்குதலிற்கு உள்ளாகி உள்ளார்.

தாக்குதலின் இறுதியில் பெரும் காயங்களினால் மிக்கேய்ல் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளர். கீழே வீழ்ந்த பின்னும் இவர்மீது தொடர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது
இதன் தொடர்ச்சியாக மிக்கேய்ல் ஊனமுற்றவர் ஆக்கப்படார். 

நான் வாழ்நாள் முழுவதிற்கும் ஊனமுற்றவன் ஆக்கப்பட்டுள்ள்ளேன். எனது வலது பக்கம் முழுவதும் செயலிலழந்து விட்டது (hémiplégique).
 நான் என் கைகளைக்கூட அசைக்க முடியாது. ஒரு ஊன்று கோலின் உதவியுடன் மட்டுமே நான் மிகவும் சிரமப்பட்டுச் சிறிதளவு நடக்கின்றேன.

 தாக்குதலின் போது என் தலையில் பெரும் துளை ஒன்று ஏற்பட்டது. இப்பொழுது எனது மண்டை ஓட்டின் ஒரு பகுதியில் இரும்புத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. என்னால் பேசக்கூட முடியவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
தண்டனை வழங்கப்பட்ட குற்றவியற் தடுப்புப்பிரிவின் காவற்துறையினன், எக்காலத்திலும் காவற்துறையில் கடமையாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 'அதிகாரமுடைய ஒருவர் ஒரு பொதுமகன் மீது ஆயுதப்பிரயோம் செய்தமை' என்ற குற்றத்தின் அடிப்படையில் இவர் சிறையில் இடப்பட்டுள்ளார்.

Related

லிங்கா 100 ஆவது நாளன்று ரஜினியின் வீட்டு முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம்

லிங்கா’ 100 ஆவது நாளன்று ரஜினியின் வீட்டு முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் 22 ஆம் திகதி ‘லிங்கா’ 100 ஆவது நாள் விழாவை சென்னை அல்பர்ட் த...

பர்மா முஸ்லிம்களின் துயர் துடைக்க ரூ 350 கோடியை மன்னர் சல்மான் வாரி வழங்கினார்….!!

இரு புனித பள்ளியின் சேவகரும்,உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதிஅரேபியாவின் சக்கரவர்த்தியுமான மன்னர் சல்மான் அவர்கள் பர்மாவில்வசிக்கும் முஸ்லிம்களின் துயர் துடைப்பதற்காக...

பின்லேடனை காட்டி கொடுத்தவரின் வக்கீல் பாகிஸ்தானில் சுட்டு கொலை

பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்த டாக்டருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஒருவரை நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த கொலையை தலிபான்களின் ஆதரவு இயக்கம...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item