ஹில்டன் ஹோட்டலை ஒரே நாளில் என்னிடமிருந்து பறித்தெடுத்தார் பஷில் ராஜபக்ஷ. இதற்கு முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸும் உடந்தை. இதனைச் சொல்வதற...
ஹில்டன் ஹோட்டலை ஒரே நாளில் என்னிடமிருந்து பறித்தெடுத்தார் பஷில் ராஜபக்ஷ. இதற்கு முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸும் உடந்தை. இதனைச் சொல்வதற்கு நான் அஞ்சப்போவதில்லை.
நீதிமன்றம் சென்றேன். அங்கும் எனக்கு நீதி மறுக்கப்பட்டது” என நீறு வெளியான பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் ஹில்டன் ஹோட்டலின் முன்னாள் உரிமையாளர் கோர்னல் பெரேரா.
முன்னைய ஆட்சியில் அதிகாரத் துஷ்பிரயோகம், நீதியின் அநீதி, உச்ச கட்ட ஊழல், பகற்கொள்ளை, தலைவிரித்தாடிய இனவாதம்… என்று சகலதும் நடந்தேறியது.
ஆனால், இன்னும் நடந்தேறவில்லை அதற்கெதிரான பாரிய நடவடிக்கைகள்.
அரசியல் பழிவாங்கல் கூடாதுதான்.
குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கவும் கூடாது.
அவர்கள் ஆட்சிக் கதிரையில் அமர்ந்திருந்தாலும் சரி,
எதிர்த் தரப்பு வரிசையில் அமர்ந்திருந்தாலும் சரி.
காணாமல் போன பைல்களைக் கண்டுபிடிக்க காலம் எடுப்பதில் ஆட்சேபனையில்லை.
தயவுசெய்து நீதியையும் தொலைத்து விடாதீர்கள்.
கண்டுபிடிக்க எவ்வளவு காலம் எடுக்குமோ!