மிக மிக சிறு ரக ஆளில்லா விமானங்களை வாங்க சுவிஸ் அரசு திட்டம்!

எதிரிகளை கண்காணிக்க கூடிய வகையில் புதிய ஆளில்லா விமானங்களை வாங்க சுவிஸ் ராணுவம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரோன்ஸ் (Dron...

எதிரிகளை கண்காணிக்க கூடிய வகையில் புதிய ஆளில்லா விமானங்களை வாங்க சுவிஸ் ராணுவம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரோன்ஸ் (Drones) எனப்படும் சிறு ரக ஆளில்லா விமானங்களை சுவிஸ் ராணுவத்தின் ஒரு பிரிவான தரைப்படையில் பயன்படுத்துவதன் மூலம் எதிரிகளை மிக அருகிலேயே கண்காணிக்க முடியும். எதிரிகள் மலைகள் அல்லது உயர் கட்டிடங்கள் மத்தியில் இருந்தாலும் கூட இந்த ஆளில்லா விமானங்கள் மூலம் எளிதில் கண்காணிக்கலாம். 2020 ஆம் ஆண்டு இவ்வகை விமானங்களை வாங்க திட்டமிட்டிருப்பதுடன் அதற்கான மாதிரிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகளில் சுவிஸ் அரசு ஈடுபட்டு வருவதாக சுவிஸ் ராணுவத்துறை செய்தி தொடர்பாளரான Kaj-Gunnar Sievert தெரிவித்துள்ளார்.

ஆளில்லா விமானங்களை கொள்முதல் செய்வதற்காக அரசு சுமார் 8 மில்லியன் பிராங்குகளை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பரிசோதனை செய்யப்பட்ட மாதிரி விமானங்கள் அல்லது அவற்றை பற்றிய விவரக்குறிப்புகள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். அகச்சிகப்பு கமெராக்கள் (Infrared Cameras) பொருத்தப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானங்களை எந்த சிரமமும் இன்றி வெறும் கைகளாலேயே வானத்தில் உடனுக்குடன் செலுத்தலாம்.

சுவிஸ் ராணுவத்துடன் ஏற்கனவே பெரிய அளவிலான ஆளில்லா விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. பேராபத்துகளில் உதவியாகவும் காவல் மற்றும் எல்லையோர பாதுகாப்பு பணிகளில் இவ்வகையான பெரிய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Related

உலகம் 3714069951244543680

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item