ஜனாதிபதியின் அதிரடி ; பள்ளிவாசல் பிரச்சினைகளுக்கு தீர்வு .

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் பிரச்­சி­னை­க­ளுக்கு எதிர்­வரும் பொதுத் தேர்­தலின் பின்பு நி...


தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் பிரச்­சி­னை­க­ளுக்கு எதிர்­வரும் பொதுத் தேர்­தலின் பின்பு நிரந்­தர தீர்­வுகள் பெற்றுக் கொடுக்­கப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  தெரி­வித்தார். இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் புத்­தி­ஜீ­வி­க­ளையும் கலை­ஞர்­க­ளையும் சந்­தித்து சிநே­க­பூர்­வ­மாக கலந்­து­ரை­யா­டிய போது கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு கூறினார்.
 முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கும் கூர­கல ஜெய்­லானி பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் சவால்கள் ஏற்­பட்­டன. அந்தச் சவால்கள் இன்னும் தொடர்­கின்­றன. முன்னாள் ஜனா­தி­பதி முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை அலட்­சியம் செய்ததால் முஸ்­லிம்கள் தேர்­தலில் உங்­க­ளுக்கு வாக்­க­ளித்­தார்கள்.
 உங்கள் வெற்­றியின் பங்­கா­ளர்­க­ளான முஸ்­லிம்­களின் தம்­புள்ளை மற்றும் ஜெய்­லானி பள்­ளி­வா­சல்­களின் பிரச்­சி­னைகள் எப்­போது தீர்த்­து­வைக்கப் போகி­றீர்கள் என்று விடி­வெள்ளி வின­விய போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்தார். ஜனா­தி­பதி நிகழ்வில் மேலும் தெரி­வித்­த­தா­வது,
 ஜனா­தி­பதித் தேர்­தலில் தோற்­ற­வர்கள் விட்­டுப்­போக விரும்­ப­வில்லை. 10 வரு­ட­காலம் அதீத அதி­கா­ரங்­களைப் பாவித்து மோச­மான ஆட்­சியை முன்­னெ­டுத்­தார்கள். முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் பொன்­சேக்­கா­வுக்கும் பிர­த­ம­ நீ­திய­ரசர் ஷிரா­ணிக்கும் செய்த அநீ­தி­களைப் போல் எத­னையும் நாம் செய்யப் போவ­தில்லை.
 தேசிய அர­சாங்கம் அமைப்­பதில் எதிர்க்­கட்­சிக்கும் அர­சாங்­கத்­துக்கும் ஒரு இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. அர­சியல் யாப்பு திருத்­தம்­பற்றி ஆலோ­சிக்­கப்­ப­டு­கி­றது.
 இதனை அவ­ச­ர­மாக செய்­து­விட முடி­யாது அனு­ப­வ­சா­லிகள் புத்­தி­ஜீ­வி­களின் ஆலோ­ச­னைகள் பெறப்­பட்­டு­வ­ரு­கின்­றன. இது பொது மக்கள் மத்­தியில் கலந்­த­ரை­யா­ட­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது.
 ஊழல் மோச­டி­களில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு உட­ன­டி­யாக தண்­ட­னைகள் வழங்­கப்­பட வேண்டும் என சிலர் எதிர்­பார்க்­கின்­றனர். எந்த விமர்­ச­னங்கள் எழுந்­தாலும் தீர்­வு­களும் தண்­ட­னை­களும் நாட்டின் சட்டம் மற்றும் அர­சியல் குணா­தி­சயங்­க­ளுக்கும் அமை­வா­கவே வழங்­கப்­பட வேண்டும்.
 எனவே எமக்கு பொறுமை அவ­சி­ய­மாகும். நாட்டில் அமு­லி­லுள்ள அர­சியல் கலா­சா­ரத்தை மாற்­றி­ய­மைக்க வேண்டும். விருப்பு வாக்­கு­மு­றை­மையை இல்­லாமற் செய்து புதிய தேர்தல் முறை­மையை அமுலுக்கு கொண்டுவர வேண்டும்.
 நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் என்னைச் சந்திக்க முயற்சிக்கின்றனர். அனைவரையும் சந்திக்க எனக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை உங்கள் தேவைகளை எழுதி எனது வீட்டுக்குக் கொண்டு வந்து கேட்டில் கையளியுங்கள் உங்கள் ஆலோசனைகளை எழுத்து மூலம் அனுப்புங்கள் என்றார்.

Related

இலங்கை 7697784737160021832

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item