வடக்கு பிரேசிலில் பயங்கரம்: வெள்ளத்தில் அடித்துச் சென்ற பேருந்து - வீடியோ இணைப்பு
வடக்கு பிரேசிலில் தரைப்பாலம் ஒன்றில் நின்று கொண்டிருந்த உயர்தர சொகுசுப் பேருந்து கடுமையான வெள்ளத்தில் அடித்துச் செல்லும் படு பயங்கர காட்சி ப...


தரை பாலத்தில் ஏராளமான பயணிகளுடன் நின்று கொண்டிருந்த பேருந்து,
திடீரென பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
இதனை அறிந்து உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், பயணிகளை வேகமாக இறக்கிவிட்டார். பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பேருந்து தரைப்பாலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில் விழுந்து, பாலத்தைக் கடந்து வெள்ளத்தில் அடித்துச் சென்றது.
அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் பாதிக்கப்படவில்லை. பேருந்து அடித்துச் செல்வதை அங்கிருந்த நபர்கள் செல்போனில் படமெடுத்துள்ளனர். அது இணையத்தில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.