பசில் ராஜபக்சவின் நாடு திரும்பும் அறிவிப்பால் பீதியடைந்துள்ள மகிந்த மற்றும் விமல் கோஷ்டி

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்காக இலங்கைக்கு வரவுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள்...

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்காக இலங்கைக்கு வரவுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வீமல் வீரவன்ஸ உள்ளிட்டோர் பெரும் பீதியில் இருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ச கடும் பீதியில் இருப்பதே இதில் முக்கியமான விடயமாகும். பசில் ராஜபக்ச வெளியிடும் தகவல்களின் அடிப்படையில் மகிந்த ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படலாம் என அவருக்கு நெருக்கமான தரப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சில சந்தர்ப்பங்களில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

ஓய்வில் இருக்கும் போதுதான் வஞ்சகர்கள் யார், இரண்டகம் செய்பவர்கள் யார், அழகான வார்த்தைகளை பேசி வேலை செய்தவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்ததாக முன்னாள் ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார். பசில் ராஜபக்சவை பற்றியே அவர் இவ்வாறு கூறியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை மகிந்த ராஜபக்சவை அடுத்த பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கூறிவரும் விமல் வீரவன்ஸ உள்ளிட்டோரும் மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பசில் ராஜபக்சவே காரணம் என பகிரங்கமாக கூறியுள்ளனர்.

தற்போது மகிந்த ராஜபக்சவை சூழ இருக்கும் பல நபர்களின் இரகசிய தகவல்கள் பசில் ராஜபக்ச ஊடாக வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related

இலங்கை 5032109442667830078

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item