மகிந்த வென்றிருந்தால் மைத்திரிபால மண்ணுக்கடியில் இருந்திருப்பார்: கல்வியமைச்சர்

மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வென்றிருந்தால், மைத்திரிபால சிறிசேன மண்ணில் 5 அடிக்கு கீழே இருந்திருப்பார் என கல்வியமைச்சர் அ...


மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வென்றிருந்தால், மைத்திரிபால சிறிசேன மண்ணில் 5 அடிக்கு கீழே இருந்திருப்பார் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அப்படி நடந்திருந்தால், மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவியவர்கள் நாட்டை விட்டோ அல்லது உயிரை விட்டோ சென்றிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவை திட்டியவர்கள் இன்று அவரை தலைவர் என்கின்றனர். இவற்றை நாங்கள் பொறுமையாக பார்த்து கொண்டிருக்கின்றோம்.
தேர்தல் முறையில் மாற்றங்களை செய்வது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பின்னர் தேசிய அரசாங்கத்தை அமைக்க வாய்ப்புள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியினர் ராஜபக்சவினரை பாதுகாக்கவில்லை. அவர்களை கட்சி பாதுகாப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும். எதிர்காலத்தில் அவற்றை காண முடியும்.
யாழ்ப்பாணம் மற்றும் அறுகம்பையில் நிர்மாணிக்கப்படுவது ஜனாதிபதி மாளிகையல்ல சர்வதேச மாநாட்டு மண்டபம் என கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள மக்கள் முட்டாள்கள் அல்ல.
மெகா டீல்காரர்களை தேடிப்பிடிக்க சர்வதேசத்தின் உதவி பெற்றுக்கொள்ளப்படும்.
100 நாள் வேலைத்திட்டத்தில் பலவற்றை செய்துள்ளோம். ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை வான் கலாச்சாரம் தற்போது நாட்டில் இல்லை. தகவல் அறியும் சட்டம் விரைவில் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

தர்கா நகரில் சிங்கள்-முஸ்லிம் இளைஞர்களுக்கிடையே அடிதடி !!! STF குவிப்பு

இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தர்கா நகர் பிரதேசத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற கலவரத்தின...

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர்கள் கைது

அட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் அந்த பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள மருந்தகமொன்றிலுள்ள இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தியாவிலிருந்...

ராஜித முஸ்லிம்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்

பத­விக்­கா­கவும் பட்­டத்­திற்­கா­கவும் முஸ்­லிம்கள் மதம் மாறி­னார்கள் என்ற வர­லாறே இந்த நாட்டில் கிடை­யாது. எனவே அமைச்சர் ராஜித தலைவர் ஹக்கீம் குறித்து தெரி­வித்த கருத்தை மாற்­றிக்­கொண்டு அவர் பகி­ரங்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item