மகிந்தவின் அரசியல் பயணம் உறுதி!- விமல் வீரவன்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அல்லது புதிய கட்சியின் ஊடாக மீண்டும் அரசியலுக்கு வருவது உறுதி என தேசிய சுதந...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அல்லது புதிய கட்சியின் ஊடாக மீண்டும் அரசியலுக்கு வருவது உறுதி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

வானொலி ஒன்றிற்கு இன்று காலை வழங்கிய செவ்வியில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று நாரஹேன்பிட்டியவில் வைத்து ஊடகமொன்றிற்கு தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஊடாக மாத்திரமே அரசியலுக்கு வருவேன் என தெரிவித்திருந்தார்.

நான் மிக உண்மையாகவும் உறுதியாகவும் தெரிவிக்கிறேன் எங்கள் ஜனாதிபதி நாட்டின் தலைவர் மகிந்த அரசியலுக்கு வருவார், அவர் வரமாட்டார் என நினைத்திருந்தால் நாங்கள் பேரணி நடத்துவதற்கு எங்களுக்கென்ன பைத்தியமா என விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெயர் பலகையை பிடித்துக் கொண்டிருப்பவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கு இடமளிக்க மாட்டார்கள்.

பொதுத்தேர்தலில் அமைச்சர் பதவிக்கு விருப்பமென்றால் சுதந்திரக் கட்சியில் போட்டியிடுமாறு சிலர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

மகிந்த அமைச்சர் பதவிக்காக பொதுத்தேர்தலில் போட்டியிட தேவையில்லை. பிரதம வேட்பாளராக சுதந்திரக் கட்சியில் நியமிக்க முடியுமா இல்லையா என்பதனை எங்களுக்கு உறுதியாக தெரிவிக்க வேண்டும்.

எப்படியிருப்பினும் மகிந்த ராஜபக்ச பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித மாற்றமும் இல்லை, அவர் போட்டியிடுவது உறுதி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Related

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 410 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பில் 410 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. வன்முறை சம்பவங்கள் குறித்து 31 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறை...

ஹஜ் கோட்டா பகிர்வை நடைமுறைப்படுத்த அனுமதி

ஹஜ் கோட்டா பகிர்­வுக்கு எதி­ராக மூன்று ஹஜ் முகவர் நிலைய உரி­மை­யா­ளர்­களால் உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த அடிப்­படை உரி­மை­மீறல் வழக்கில் உயர்­நீ­தி­மன்றம் நேற்று தீர்ப்­பினை வழங்­க...

முழு சமூகத்தையும் முத்திரை குத்த முடியாது : பௌசி

இலங்­கையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் சிரி­யாவில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவி­ர­வாத அமைப்பில் இணைந்து செயற்­பட்டார் என்­ப­தற்­காக முழு முஸ்லிம் சமு­தா­யத்­தையும் தீவி­ர­வா­திகள் என்று முத்­திரை குத்­தி­விட முடி...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item