போதைப்பொருள் விநியோக கைது : 56 % சிங்களவர் ,26 % தமிழர் ,19 % முஸ்லிம்கள்- 65,998 இலங்கையர்

கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையில் போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பிலான குற்றச்செயல்களுக்காக கைது செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை...

கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையில் போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பிலான குற்றச்செயல்களுக்காக கைது செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 998 என்பதுடன் இது 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 38 சதவீத அதிகாரிப்பாகும்
இலங்­கையில் போதைப்­பொருள் கடத்தல் விவ­கா­ரத்தில் இன ரீதி­யாக முஸ்­லிம்கள் பர­வ­லாக பேசப்­படும் நிலையில் தர­வு­களின் அடிப்­ப­டையில் அதனை நோக்குவோம்
அர­சாங்­கத்தின் தர­வு­களின் அடிப்­ப­டையில் சிங்­க­ள­வர்கள் 2009 ஆம் ஆண்­ட­ளவில் 15, 266 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் அதன் தொகை­யா­னது 2013 ஆம் ஆண்டில் கைது செய்­யப்­படவர்கள் எண்ணிக்கை 36,859 ஆக அதிகரித்துள்ளது   . இது பாரிய அதி­க­ரிப்­பாகும்.
இதே­வேளை தமி­ழர்­களை நோக்­கும்­போது 2009 ஆம் ஆண்­ட­ளவில் 1300 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். எனினும் அதன் தொகை­யா­னது 2013 ஆம் ஆண்­ட­ளவில் 16,934 ஆக அதி­க­ரித்­துள்­ளது.
முஸ்­லிம்­களை பொறுத்­த­வரை 2009 ஆம் ஆண்டில் 2153 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் அதன் தொகை 2013 இல் 12,202 ஆக காணப்­ப­டு­கின்­றது.
மேற்படி தரவுகளின் படி   போதைப்­பொருள் பாவனை மற்றும் விநி­யோகம் தொடர்பில் கைது செய்­யப்­ப­டு­ப­வர்­களின் எண்­ணிக்­கையில் பாரிய அதி­க­ரிப்பை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இதன்­படி 2009 ஆண்டில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்­கை­யா­னது 18,743 ஆகவும் 2010 இல் 29,796 ஆகவும் 2012இல் 47,926 ஆகவும் 2013ஆம் ஆண்டு பூர்த்­தி­யாகும் போது அதன் தொகை­யா­னது 65,998 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது.
2013 ஆம் ஆண்டு இலங்­கையில் போதைப்­பொருள் பாவனை மற்றும் விநி­யோகம் தொடர்­பி­லான குற்றச் செயல்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை 65 ஆயி­ரத்து 998 ஆவ­தோடு இது 2012 ஆம் ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் 38 சத­வீத அதி­க­ரிப்­பாகும்.
இதற்­க­மைய கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் ஆண் பெண் விகி­தா­சா­ரத்தை நோக்கும் போது 411 ஆண்­க­ளுக்கு ஒரு பெண் என்ற விகி­தத்தில் காணப்­ப­டு­கி­றது. இவர்­களில் 36 சத­வீதத்தினர் ஹெரோயின் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டிற்­கா­கவும் 64 சத­வீ­தத்­தினர் கஞ்சா வைத்­தி­ருந்த குற்­றத்­திற்­காகவும் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­கின்­றனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு போதைப்­பொருள் விநியோக குற்­றத்­திற்­காக கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் இனங்கள் அடிப்­ப­டையில் நோக்கும் போது சிங்­க­ள­வர்கள் 56 சத­வீ­த­மா­கவும் தமி­ழர்கள் 26 சத­வீ­த­மா­கவும் முஸ்­லிம்கள் 19 சத­வீ­த­மா­கவும் காணப்­ப­டு­கின்­றது.
மேற்படி தரவுகள் நாட்டில் போதைப் பொருள் விநியோகம் மற்றும் பாவனையின் அதிகரிப்பை சுட்டிக்காட்டுகிறது , தூய்மையான தேசத்தை , சமூகத்தை கட்டியெழுப்ப இஸ்லாம் பெரும்பாவமாக பிரகடணப் படுத்தியுள்ள போதையில் இருந்து ஓவ்வொரு மனிதனையும் பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும்

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item