யுத்தக் குற்றச்சாட்டு அடிப்படையில் 150 பொஸ்னியர்களை நாடு கடத்துகின்றது அமெரிக்கா!

பொஸ்னியாவில் 1990 ஆம் ஆண்டு தொடங்கிய குழப்பத்தின் போது யுத்தக் குற்றச் செயல்களில் சம்பந்தப் பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சு...


பொஸ்னியாவில் 1990 ஆம் ஆண்டு தொடங்கிய குழப்பத்தின் போது யுத்தக் குற்றச் செயல்களில் சம்பந்தப் பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 150 பொஸ்னியர்களை நாடு கடத்துவதற்கு அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இது குறித்து நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவில் வதிவிட அனுமதி பெற்றுள்ள சுமார் 300 பொஸ்னியர்கள் யுத்த சமயத்தில் அமெரிக்காவுக்கு இடம்பெயர முன்னர் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொள்ளப் பட்டதாகவும் இதன் அடிப்படையில் இதில் அரைவாசிக்கும் அதிகமானவர்களைத் திருப்பி அனுப்புவது உறுதியாகி இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதில் பலர் 1995 ஆம் ஆண்டு ஸ்ரெப்ரெனிக்கா இல் சுமார் 7000 பொஸ்னியாக் ஆண்களும் சிறுவர்களும் கொல்லப் பட்ட இனவழிப்பில் தொடர்பு கொண்டவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டதாகவும் நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க ஏஜன்ஸிக்காக யுத்தக் குற்ற விசாரணை செய்து வரும் மிக்கேல் மக்குயின் கூறுகையில், குறுக்கு விசாரணையை ஆழமாகச் செய்யும் போது மேலும் மேலும் ஆவணங்கள் கிடைத்து வருவதாகக் கூறியுள்ளார். மேலும் இந்த மனிதாபிமானம் அற்ற பாதகச் செயலில் ஈடுபட்டவர்கள் அமெரிக்காவில் தஞ்சமடைந்து புதிய வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கையில் தனக்கு மிக அதிர்ச்சியாக இருப்பதாகவும் மிக்கேல் குறிப்பிட்டுள்ளார்.

Related

மூன்றாவது பிரெஞ்சுப்பிரஜையும் பலியாகி உள்ளார? தேடுதலில் ஜனாதிபதி!!

இன்று ஊடகங்களிற்குப் பதிலளித்த பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந், துனிசியாவில் கொல்லப்பட்ட பிரெஞ்சுப்பிரஜைகள் பற்றிய விளக்கத்தை அளித்தார். "இரண்டு பிரெஞ்சுக் குடிமக்கள், பயங்கர...

பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கிய பிரெஞ்சுக் குடிமக்கள்!! படுகொலைகளும், காயங்களும்!!

இத்தாலியின் மாபெரும் உல்லாசப்படகுச் சேவையான MSC யின் MSC Splendida எனும் உல்லாசக் கப்பலில் சென்றவர்களில் ஒன்பது பேர், துனிசியாவின் பயங்கரவாதத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பலியாகி உள்ளனர் எனத் தெ...

போகோஹரம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 200 மாணவியர் குறித்த தகவல் தெரியவில்லை: - ராணுவ தளபதி தெரிவிப்பு

போகோஹரம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவியர் குறித்த தகவல் தெரியவில்லை என நைஜீரிய நாட்டு ராணுவ தளபதி கூறியுள்ளார். நைஜீரியாவில் வசிக்கும் பிற மதத்தவர்கள், முஸ்லிம்களாக மதம் மாற ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item