எமனில் பள்ளிவாயல்கல் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 137 பேர் பலி

எமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள பள்ளிவாயல்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் ...


bomb-blast

எமன் நாட்டின் தலைநகரான சனாவின்

மையப்பகுதியில் உள்ள பள்ளிவாயல்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய

தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 137 ஆக

உயர்ந்துள்ளது.

சனாவின் மையப்பகுதியில் உள்ள

பள்ளிவாயல்களில் நேற்று வெள்ளிக்கிழமைஎன்பதால் ஏராளமான மக்கள்

பிரார்த்தனைக்காக வந்திருந்தனர்.

அப்போது அல்-பத்ர் மற்றும் அல்-

ஹசாஹூஷ் என்ற இரண்டு பள்ளிவாயல்களுல் புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள்

தங்கள் உடல்களில் கட்டியிருந்த

வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இதனால் மசூதி வளாகம் முழுவதும் ரத்த வெள்ளத்தில் உடல்கள் சிதறிக்

கிடந்தன. பலர் ரத்தம் சொட்டச் சொட்ட காப்பாற்றும்படி கதறித் துடித்தனர்.

இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.

3 இடங்களில் நடந்த இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர்

காயமடைந்திருப்பதாகவும் உள்ளூர்

தொலைக்காட்சி முதற்கட்ட செய்தியை

வெளியிட்டிருந்தது. ஆனால், நேரம்

செல்லச் செல்ல தீக்காயங்களுடன்

உயிருக்குப் போராடிய பலர் இறந்தனர்.

மாலை நிலவரப்படி பலியானோரின்

எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளதாக அல் ஜசிரா தொலைக்காட்சி செய்தி

வெளியிட்டுள்ளது.

345 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை

பெற்று வருகின்றனர். மேலும் சிலர்

உயிருக்கு ஆபத்தான நிலையில்

மருத்துவமனைகளில் இருப்பதால் பலி

மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

காயமடைந்தவர்களுக்கு செலுத்துவதற்கு தேவையான அளவுக்கு ரத்தம் இருப்பு இல்லாததால், அவர்களுக்கு உரிய

சிகிச்சை அளிக்க முடியாத நிலை

ஏற்பட்டுள்ளது. எனவே, ரத்ததானம் செய்ய விரும்புவோர் உடனடியாக

மருத்துவமனைகளுக்கு வரும்படி அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related

பக்தாதி உள்பட 24 ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்ல முடிவு: அமெரிக்க சிறப்புப்படை தயாராகிறது

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தனிநாடு அமைத்து அட்டூழியம் செய்து வருகின்றனர். தற்போது அண்டை நாடுகளிலும் தாக்குதல் நடத்துகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்...

இறந்த பிறகும் பேஸ்புக் பக்கத்தை நிர்வகிக்கலாம்: பேஸ்புக் நிறுவனம் புதிய ஏற்பாடு

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் கில் தற்போது பல கோடிப்பேர் தங்களுக்கென்று தனி கணக்கு வைத்திருக் கிறார்கள். உயிரோடு இருக்கும் வரை அவர் தன் பக்கத்தை நிர்வகிக்கலாம். ஆனால் அவர் இறந்த பிறகு அவரது பக்க...

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 172 இந்திய மீனவர்கள் விடுதலை

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 172 இந்திய மீனவர்கள், அந்நாடு ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்தது. இந்திய மீனவர்கள் விடுதலை குறித்து, பாகிஸ்தான் நாட்டின் மாலிர் சிறை கண்காணிப்பாளர் செய்திய...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item