மூன்று மணி நேரம் மரத்தில் தொங்கி உயிருக்குப் போராடிய நெதர்லாந்து பிரஜை! (video)

உலக முடிவு என அழைக்கப்படும் அம்பேவலை ஹோட்டன் (Horton) சமவெளி பகுதியில் இருந்து தவறி விழுந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் மூன்று மணி நே...

worlds_end_story
உலக முடிவு என அழைக்கப்படும் அம்பேவலை ஹோட்டன் (Horton) சமவெளி பகுதியில் இருந்து தவறி விழுந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் மூன்று மணி நேர போராட்டத்தின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
 மனிதா என்ற 35 வயதுடைய நபரே மூன்று மணி நேரம் மரத்தில் தொங்கி போராடிய நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
 நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனிதா என்ற நபரும் அதே நாட்டை சேர்ந்த லின்டா என்ற 31 வயது பெண்மணியும் கடந்த 10.02.2015 அன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
 திருமணத்தின் பின்பு இவர்கள் இருவரும் கடந்த 14.02.2015 அன்று தமது சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு சிறிலங்கா வந்துள்ளனர்.
 இவர்கள் நுவரெலியாவில் இருந்து புறப்பட்டு உலக முடிவு பகுதியை பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.
 அங்கு சென்றதும் இவர்கள் இருவரும் தன்னை அழைத்து வந்த இவர்களின் வழிகாட்டியை விட்டு விட்டு உலக முடிவு பகுதிக்கு சென்றுள்ளனர்.
 அங்கு சென்ற இவர்கள் காலை 8.50 மணியளவில் புகைப்படம் எடுக்க முயற்சித்த வேளையில் கால் தவறி மனிதா என்ற நபர் பாதாளத்தில் பின்புறமாக விழுந்துள்ளார்.
 இதன்போது அதிஸ்டவசமாக ஒரு மரத்தில் விழுந்த இவர் அதனை கட்டியணைத்தபடி போராடியுள்ளார்.


 இதனையடுத்து பொலிசாருக்கும் இராணுவத்தினரும் போராடி அவரின் உயிரை மூன்று மணி நேரம் கழித்து காப்பாறியுள்ளனர்.


Related

உலகம் 6279507694764362151

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item