நிவாரணங்களை அள்ளி வந்த பட்ஜெட் – புதிய பொருட்களின் விலைகளின் விபரம் உள்ளே

பி.ப 3.14 – கசினோ உரிமையாளர்கள் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் 1000 மில்லியன் ரூபா வரி செலுத்த வேண்டும் – நிதி அமைச்சர் பி.ப 3.08 – சீமெந்திற்...

downloadபி.ப 3.14 – கசினோ உரிமையாளர்கள் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் 1000 மில்லியன் ரூபா வரி செலுத்த வேண்டும் – நிதி அமைச்சர்

பி.ப 3.08 – சீமெந்திற்கான விலை ரூபா 90 இனால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்

பி.ப 3.06 – ஹைபிரிட் வாகனங்களுக்கான வரியும் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்

பி.ப 3.06 – 1000 cc திறனுக்கு குறைந்த வாகனங்களிற்கான இறக்குமதி வரி 15% இனால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்

பி.ப 3.02 – அரச வங்கிகளில் ரூபா 2 இலட்சத்திற்கு கிறைவான தங்க நகை அடகுக்கான வட்டி முற்றாக நீக்கப்படும் – நிதி அமைச்சர்

பி.ப 2.58 – 12.5 கிலோகிராம் காஸ் சிலின்டரின் விலை ரூபா.1595 – நிதி அமைச்சர்

பி.ப 2.55 – 1 கிலோ 60 ரூபாவினாலும் , மாசி கருவாட்டின் விலை 200 ரூபாவினாலும் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்

பி.ப 2.53 – 1 கிலோ கொத்தமல்லியின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்

பி.ப 2.52 – தகரத்தில் அடைக்கப்பட்ட மீனின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்

பி.ப 2.50 – கோதுமை மாவின் விலை 12.50 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்

பி.ப 2.49 – சஸ்டஜின் பால் மாவின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்

பி.ப 2.48 – 400 கிராம் பால்மாவின் ஆகக்கூடிய சில்லறை விலை ரூ.325 – நிதி அமைச்சர்

பி.ப 2.47 – சீனியின் விலை 10 ரூபாவினால் இன்றிரவு குறைக்கப்படும் – நிதி அமைச்சர்

பி.ப 2.44 – மண்ணெண்ணையின் விலை மேலும் 6 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்

பி.ப 2.43 – கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% ஆகவும் சுகாதார துறைக்கான ஒதுக்கீடு 3% ஆகவும் அதிகரிக்கப்படும் – நிதி அமைச்சர்

பி.ப 2.39 – அரச வைத்தியசாலைகளில் வௌி நோயாளர் பிரிவு 24 மணி நேரமும் செயற்படும் – நிதி அமைச்சர்

பி.ப 2.35 – பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பன்முகப்படுத்தப்பட்ட நிதி ரூ.5 மில்லியனிலிருந்து ரூ10 மில்லியனாக அதிகரிப்பு – நிதி அமைச்சர்

பி.ப 2.33 – பசும் பாலிற்கான வாங்கும் விலை ரூ.10 இனால் அதிகரிப்பு – நிதி அமைச்சர்

பி.ப 2.32 – தேயிலை மற்றும் இறப்பருக்கான நிர்ணய விலை அதிகரிப்பு – நிதி அமைச்சர்

பி.ப 2.31 – குறைந்த விலைக்கு கை உழவு இயந்திரம் – நிதி அமைச்சர்

பி.ப 2.30 – நெல்லிற்கான நிர்ணய விலை ரூ.50 – நிதி அமைச்சர்

பி.ப 2.28 – உடன் அமுலுக்கு வரும் வகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.20,000 கொடுப்பனவு – நிதி அமைச்சர்

பி.ப 2.25 – ஓய்வூதிய பெறுபவர்களுக்கான வங்கி வைப்பு வட்டி வீதம் அதிகரிக்கப்படும் – நிதி அமைச்சர்

பி.ப 2.23 – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதியை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம் – நிதி அமைச்சர்

பி.ப 2.22 – ஓய்வூதியக் கொடுப்பனவு ஏப்ரல் மாதத்திலிருந்து ரூ.1000 இனால் அதிகரிக்கப்படும் – நிதி அமைச்சர்

பி.ப 2.21 – நாட்டின் ஆடைக் கைத்தொழிலை முன்னேற்றுவோம் – நிதி அமைச்சர்

பி.ப 2.19 – தனியார் துறையினருக்கும் ஆகக்குறைந்தது ரூ.2,500 இனால் சம்பளத்தை அதிகரிக்குமாறு கேட்டுகொள்கிறேன் – நிதி அமைச்சர்

பி.ப 2.17 – அமைச்சரவை குறைப்பு ரூ.2.5 பில்லியன் செலவு குறைக்கப்பட்டுள்ளது – நிதி அமைச்சர்

பி.ப 2.17 – இதுவே அதிகூடிய சம்பள அதிகரிப்பாகும் – நிதி அமைச்சர்

பி.ப 2.12 – முன்னைய அரசாங்கத்தின் கடன்களை செலுத்த வேண்டிய நிலை இந்த அரசிற்கே ஏற்பட்டுள்ளது – நிதி அமைச்சர்

பி.ப 2.09 – அரச சேவையாளர்களின் சம்பளம் ரூ.10,000 ஆல் அதிகரிக்கப்படும். இதில் அரைப்பகுதி தற்போதும் மிகுதி ஜீன் மாதம் வழங்கப்படும். – நிதி அமைச்சர்

பி.ப 2.07 – தனியே தெரிவு செய்யப்பட்ட நகரத்தை மாத்திரம் அபிவிருத்தி செய்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது – நிதி அமைச்சர்

பி.ப 2.04 -2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலக செலவு 9000 கோடியிலும் அதிகம் – நிதி அமைச்சர்

பி.ப 2.01 – மொத்தக் கடன் தொகை 8800 பில்லியன் ரூபாய்கள் – நிதி அமைச்சர்

பி.ப 1.59 – நாட்டு மக்கள் முற்றாக கடனாளியாகியுள்ளனர் – நிதி அமைச்சர்

பி.ப 1.55 – பெற்றோலிய கூட்டுத்தாபன ஹெட்ஜிங் மூலமாக அரசிற்கு 120 அமெரிக்க டொலர்கள் செலவு – நிதி அமைச்சர்

பி.ப 1.54 – முன்னைய அரசின் வரவு செலவுத்திட்ட சுருக்கம் – நிதி அமைச்சர்

பி.ப 1.51 – 2009 ஆண்டு தேர்தல் முடிவின் பின்னர் எதிர்த்துத் போட்டியிட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் நாம் ஹெலிகொப்டரை வழங்கினோம் வீடு செல்வதற்காக – நிதி அமைச்சர்

பி.ப 1.42 – இந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் – நிதி அமைச்சர்

பி.ப 1.38 – எமது அரசுடன் இணைந்து நாட்டை முன்னேற்ற ஒன்றிணையுங்கள் – நிதி அமைச்சர்

பி.ப 1.37 – மைத்திரி நிர்வாகத்தில் புதிய இலங்கை உருவாகுகின்றது – நிதி அமைச்சர்




2ம் இணைப்பு

இன்று நள்ளிரவு தொடக்கம் 12.5 கிலோ கேஸ் சிலின்டர் விலை 300 ரூபாவால் குறைக்கப்படும் எனவும் அதன்படி 1596 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என்றும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

இலங்கையின் கல்வித் துறைக்கு தேசிய வருமானத்தில் 6% நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மண்ணெண்னை லீட்டருக்கு மேலும் 6 ரூபா குறைக்கப்படும் என்றும் அதன்படி 59 ரூபாவிற்கு மண்ணெண்னை ஒரு லீட்டர் கொள்வனவு செய்ய முடியும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓய்வூதியம் 1000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 20,000 கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடனில் 50% குறைப்பு செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

வரவு செலவுத்திட்டத்தில் மேலும்….

விவசாயிகளின் கடனில் 50 வீதம் இரத்துச் செய்யப்படும்

சிரேஷ்ட பிரஜைகள் வர்த்தக வங்கிகளில் வைப்புச் செய்துள்ள நிரந்த வைப்புகளுக்கான வட்டி 15 வீதமாக அதிகரிக்கப்படும்.

எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது

எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 1596 ரூபாவாகும். அண்மையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்திற்கு அமைய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

சீனி கோதுமை மா பாண் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது

சீனி கோதுமை மா பாண் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக 2015ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றி வரும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனியின் ஒரு கிலோவின் விலை 10 ரூபாவினாலும் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 12.5 ரூபாவினாலும் 400 கிராம் எடையுடைய பால் மாவின் விலை 100 ரூபாவினாலும், பயறு ஒரு கிலோவின் விலை 40 ரூபாவினாலும், டின் மீனின் விலை 60 ரூபாவினாலும் உழுந்து ஒரு கிலோவின் விலை 60 ரூபாவினாலும் மாசி ஒரு கிலோ கிராமின் விலை 100 ரூபாவினாலும் காய்ந்த மிளகாயின் விலை 25 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளது.

இவ்வாறு பொருட்களுக்கான விலையை குறைப்பதனால் அரசாங்கத்தின் வரி வருமானம் குறைவடைகின்றது. எனினும் மக்களுக்கு நலன்களை வழங்கும் நோக்கில் இவ்வாறு சலுகைகள் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.

பத்து பொருட்களின் விலைகளையே குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தோம். எனினும் 13 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 3160348810702026388

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item