இரா­ஜ­தந்­திர பத­வி பெற்­றுக்­கொள்ள இணக்கம் தெரி­வித்த போதிலும் மொகான் பீரிஸ் அது தொடர்­பான கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

பிர­தம நீதி­ய­ரசர் மொகான் பீரிஸ் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்து விட்டு இரா­ஜ­தந்­திர பத­வி­யொன்றைப் பெற்­றுக்­கொள்ள முன்னர் இணக்கம் தெரி­வி...

பிர­தம நீதி­ய­ரசர் மொகான் பீரிஸ் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்து விட்டு இரா­ஜ­தந்­திர பத­வி­யொன்றைப் பெற்­றுக்­கொள்ள முன்னர் இணக்கம் தெரி­வித்த போதிலும் பின்னர் அது தொடர்­பான கூட்­ட­மொன்றில் கலந்து கொள்­ளாமல் விலகிச் சென்று விட்­ட­தாக நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக்ஷ தெரி­வித்­துள்ளார்.

பிர­தம நீதி­ய­ரசர் ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் தான் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு ரோமில் இரா­ஜ­தந்­திர பத­வி­யொன்றைப் பெற்றுச் செல்ல இணக்கம் தெரி­வித்தார் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறு­கையில் பிர­தம நீதி­ய­ரசர் ஜனா­தி­பதி செய­ல­கத்­திற்கு வருகை தந்­தி­ருந்தார். அவ்­வே­ளையில் அமைச்­ச­ரவைக் கூட்டம் ஒன்று நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது. எனினும் அந்தக் கூட்டம் முடி­வ­டையும் முன்­னரே அவர் சடு­தி­யாகச் சென்­று­விட்டார்.

அவர் ஜனா­தி­ப­தி­யு­டனும் பிர­த­ம­ரு­டனும் மேற்­கொண்ட இரண்டு கட்­டப்­பேச்­சு­களின் போது தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை சமர்­ப்பிப்­ப­தாகத் தெரி­வித்­தி­ருந்தார். இது எனது முன்­னி­லையில் இடம்­பெற்­றது. அவர் தனக்கு இரா­ஜ­தந்­திரப் பத­வி­யொன்று தரப்­பட வேண்டும் எனக் கோரினார். நான் வெளி­வி­வ­கார அமைச்­சுடன் பேசி அவ­ருக்கு ரோமில் இரா­ஜ­தந்­திர பத­வி­யொன்றை வழங்க இணக்கம் தெரி­வித்­தி­ருந்தேன்.

கடந்த 21ஆம் திகதி அவ­ரது கோரிக்­கையின் பேரில் நாங்கள் இந்தக் கூட்­டத்தை நடத்­தினோம். பிற்­பகல் 5 மணி­ய­ளவில் தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை சமர்ப்­பித்து விட்டு ரோமுக்­கான தனது பத­வியை ஏற்­றுக்­கொள்­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்தார். இந்­த­நி­லையில் ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு வருகை தந்­தி­ருந்த அவர் திடீ­ரென வந்த தொலை­பேசி அழைப்­பொன்­றை­ய­டுத்து அங்­கி­ருந்து சென்­று­விட்­ட­தாக அறிந்தோம் என்று தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை ஜனா­தி­பதி தேர்தல் அன்று அலரி மாளி­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் இரா­ணு­வப்­பு­ரட்­சிக்­கான முயற்சி தொடர்பில் பிர­தம நீதி­ய­ர­ச­ரிடம் வாக்­கு­மூலம் பெறப்­பட்­டுள்­ளது.

குற்றப் புல­னாய்­வுத்­து­றை­யினர் பிர­தம நீதி­ய­ரசர் மொஹான் பீரி­ஸிடம் வௌ்ளியன்று மாலை வாக்­கு­மூ­லத்தை பெற்­ற­தாக பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் ஜோன் அம­ர­துங்க தெரி­வித்­துள்ளார்.

ஏற்­க­னவே இந்த சம்­பவம் தொடர்பில் மேல் மாகா­ண­சபை உறுப்­பினர் உதய கம்­மன்­பில முன்னாள் வெளி­யு­றவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்­பட்­ட­வர்­க­ளிடம் வாக்­கு­மூ­லங்கள் பெறப்­பட்­டுள்­ளன.

வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர கடந்த 15ஆம் திகதி மேற்­கொண்ட முறைப்­பாட்டில் அதி­கா­ரத்தைக் கவிழ்ப்­ப­தற்­கான சதித்­திட்டம் ஒன்றில் ஈடு­பட்­ட­தாக மொஹான் பீரிஸ் மீது குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருந்தார். இந்த முறைப்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

கடந்த 9 ஆம் திகதி அதி­காலை 5 மணி­ய­ளவில் அலரி மாளி­கைக்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்க சென்ற போது அங்கு மொஹான் பீரிஸ் நின்­ற­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை இந்தக் குற்­றச்­சாட்டின் பேரில் பிர­தம நீதி­ய­ரசர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்டு வருகிறது. பிரதம நீதியரசரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டமையானது எதிர்காலத்திற்கு ஆரோக்கியமான முன்னுதாரணம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related

உலகம் 2628064805795493372

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item