புளுமென்டல் தாக்குதல் ; மகிந்த அணியினர் சிக்கினர்!!

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் இன...






அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் தனசிறி அமரதுங்க ஆகியோரின் வெல்லம்பிட்டியில் உள்ள தேர்தல் பிரசார அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வாகனம் பொலிசாரினால் இன்று மீட்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் நோக்கில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து வாடகைக்குப் பெறப்பட்டுள்ளது.

தெஹிவளை-கல்கிஸ்ஸை நகராதிபதி தனசிறி அமரதுங்கவின் முக்கிய ஆதரவாளரும், பாதாள உலக முக்கியஸ்தருமான பிரியந்த கருணாரத்தின என்பவர் இந்த வாகனத்தை வாடகைக்குப் பெற்றுக்கொண்டுள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட தினத்தன்று குறித்த வாகனத்தில் இருந்தவர்கள் பல தடவைகள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பிரசாரக் கூட்டத்தை நோட்டமிட்டுள்ளனர். அதன் பின்னரே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தற்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தைக் கொண்டு வெல்லம்பிட்டியவில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாரினால் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Related

இலங்கை 1211958750494156956

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item