பேருவளையில் பொதுபல சேனா(பொதுஜன பெரமுன) தேர்தலில் பிரச்சாரக் கூட்டத்தில் பதற்ற நிலை.

பேருவளை சீனங் கோட்டை பிரதேசத்தில் தற்பொழுது இடம்பெற்றுவரும் பொதுஜன பெரமுன தேர்தலில் பிரச்சாரக் கூட்டத்தில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட...

பேருவளை சீனங் கோட்டை பிரதேசத்தில் தற்பொழுது இடம்பெற்றுவரும் பொதுஜன பெரமுன தேர்தலில் பிரச்சாரக் கூட்டத்தில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றன.
சீனங் கோட்டையில் நடைபெறும் கூட்டத்தை பார்க்கச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் சிலருடன் பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் சிலர் முரண்பட்டுக்கொண்டமையிலாலேயே குறித்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
என்றாலும் நிலைமை தற்பொழுது விசேட அதிரடிப் படையில் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் களுத்தறை மாவட்ட வேட்பாளரும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளருமான கலகொட அத்தே ஞானசார தேரர் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 8926384048033845488

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item