மஹிந்தவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நடிகர் விஜய்!?

சிறிலங்காவில் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த பல்வேறு தரப்பினர் முய...

சிறிலங்காவில் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த பல்வேறு தரப்பினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம் பெயர் தமிழ் அமைப்பு ஒன்று பத்து இலட்சம் கையெழுத்தும் பெறும் நடவடிக்கை உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கையெழுத்து வேட்டை தமிழகத்திலும் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவாக நடிகர் விஜயையும் இணைந்துள்ளார்.

Actor_Vijay என்ற ட்விட்டர் கணக்கில் "ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த செய்திய இங்க பதிவு செய்கிறேன்" என்ற தலைப்பில் ஒரு ட்வீட் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நடந்தது இனப்படுகொலைதான் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடம் இருந்து 10 லட்சம் வாக்குகள் கேட்டிருக்கிறது.. ஆனால் இதுவரை 2 லட்சம் வாக்குகள்தான் வந்திருக்கு.. இத நினைத்து கண்டிப்பா நாம எல்லாம் வெட்கப்படனும்.. உலகத்துல கிட்டத்தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம். குறைந்தபட்சம் ஒரு கோடி பேராவது இணையதளம் பயன்படுத்தறோம். ஆனாலும் வெறும் 10 லட்சம் வாக்குகளுக்கு இந்த முக்கு முக்குறோம்.. இந்த இணைப்பை பயன்படுத்தி 10 லட்சத்தில் நீங்கள் ஒருவர் இணைந்து கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதில் கையெழுத்திட்டு வருகின்றனர். இதில் இணைய வேண்டும் என்று @Actor_Vijay எனும் ட்விட்டர் கணக்கு மூலம் அழைப்பு விடுத்திருக்கிறது.

நடிகர் விஜய்யின் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது @Actor_Vijay என்கிறது கணக்கு முகப்பு பக்கம். நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வமான @actorvijay என்ற ட்விட்டர் பக்கத்தை தொடர்ந்து இது ரீ ட்வீட் செய்தும் வருகிறது.

இப்படியான நிலையில் திடீரென சிறிலங்கா பிரச்சனையில் விஜய்யை அவரது ரசிகர்களே கோர்த்து விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related

ஐ.எஸ். இயக்கத்தை அழிக்க கைகோர்க்கும் ஈரான் , அவுஸ்திரேலியா

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிவிரவாதிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியாவினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவினையும் வழங்குவதற்கு தாம் தயாராகவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதன் முக்கிய கட்டமாக ப...

2 ஆம் உலகப் போர் வெற்றி ஊர்வலத்தில் உலகத் தலைவர்கள் பங்கேற்பதை எதிர்க்கிறதா வாஷிங்டன்?

எதிர்வரும் மே 9 ஆம் திகதி 2 ஆம் உலகப் போர் நிறைவுற்ற 70 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது.இதன் போது நாஷிக்களால் கொல்லப் பட்ட மக்களுக்கு மரியாதை அளிக்கும் முகமாகவும் நாஷிசத்துக்கு எ...

சிறிலங்கா விடயத்தில் தவறு விட்ட இந்திராகாந்தி!

தமிழ் மக்களுக்கான உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ விடாபிடியாக இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item