மகிந்த ஏறிய மேடை சரிந்து விழப் போன நிலை; பசில் மிஸ்ஸிங்: நேற்றைய சுவாரஸ்யங்கள்!

பாரா­ளு­மன்ற தேர்­தலில் கள­மி­றங்­கு­வது தொடர்­பி­லான முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்சவின் விசேட அறிவிப்பைக் கேட்பதற்காகவும் அவருக்கு ஆதர...



பாரா­ளு­மன்ற தேர்­தலில் கள­மி­றங்­கு­வது தொடர்­பி­லான முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்சவின் விசேட அறிவிப்பைக் கேட்பதற்காகவும் அவருக்கு ஆதரவு நல்கும் வகையிலும் நேற்று காலை மெத­மு­லனவில் உள்ள அவ­ரது வாசஸ்­த­லத்திற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தனர்.

மேலும் முன்னாள் சபா­நா­யகர் சமல் ராஜபக்ச உள்­ளிட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை சேர்ந்த 40 இற்கும் மேற்­பட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மாகாண சபை உறுப்­பி­னர்­களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்­டி­ருந்­தனர். அத்­தோடு முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ச இந்த நிகழ்வில் கலந்துகொண்டபோதிலும், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பங்கு கொள்­ள­வில்லை என்­பது விசேட அம்­ச­மாகும்.

பாரா­ளு­மன்ற தேர்­தலில் கள­மி­றங்­கு­வது தொடர்­பி­லான முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்சவின் விசேட அறிவிப்பு தொடர்பான நிகழ்வு நேற்று மெத­மு­லனவில் உள்ள அவ­ரது வாசஸ்­தல வாள­கத்தில் நிகழ்த்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இதன்­ பி­ர­காரம் நிகழ்வு வணக்க வழிப்­பா­டு­க­ளுடன் ஆரம்­பித்து, முற்­பகல் 11 மணி­ய­ளவில் மஹிந்த ராஜபக்ச மெத­மு­ல­ன­வில் ஒன்­று­கூ­டி­யி­ருந்த மக்களை சந்­தித்து உரை­யாடினார். இதன்­போது அங்கு ஒன்­று­கூ­டி­யி­ருந்­த­வர்கள் பெரும் கோஷம் எழும்பி வர­வேற்­றனர்.

இந்த நிகழ்வில் பங்­கு­பற்­றி­ய­வர்­களில் பெரும்­பா­லோ­னோ­ரிற்கு மெத­மு­லன வீட்­டு வளா­கத்­திற்குள் பிர­வே­சிக்க முடி­யாத நிலைமை காணப்­பட்­டதை அவ­தா­னிக்க கூடி­ய­தாக இருந்­தது. மேலும் இந்த நிகழ்வில் பொலன்­ன­றுவை, மெதி­ரி­கி­ரிய விகா­ரா­தி­பதி உள்­ளிட்ட 60 மேற்­பட்ட பிக்­குகள் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர்.

அத்­தோடு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ஸ, பந்­துல குண­வர்­தன, வாசு­தேவ நாண­யக்­கார, தினேஷ் குண­வர்­தன, டலஸ் அழ­கப்­பெ­ரும, கீதாஞ்சன குண­வர்­தன உள்­ளிட்ட 40 இற்கும் மேற்­பட்டோர் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர். அத்­தோடு மேல் மாகாண சபை முத­ல­மைச்சர் பிர­சன்ன ரண­துங்க உள்­ளி்ட்ட மாகாண சபை உறுப்­பி­னர்கள் பலரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

மேலும் முன்னாள் ஜனா­தி­ப­தியின் குடும்­பத்­தி­னர்­களின் சார்ப்­பாக முன்னாள் சபா­நா­யகர் சமல் ராஜபக்ச, முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ச ஆகியோர் பங்கு பற்­றி­யி­ருந்­தனர்.
இதே­வேளை மஹிந்த ராஜ­பக்சவின் சகோ­த­ரரும் முன்னாள் பொரு­ளா­தார அபிவிருத்தி அமைச்­ச­ரு­மான பஷில் ராஜபக்ச இந்த நிகழ்வில் கலந்து கொள்­ள­வில்லை.

அதே­போன்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லாளர் சுசில் பிரே­ம­ஜ­யந்த உள்­ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்கள் இந்த நிகழ்வில் பங்கு கொள்­ள­வில்லை.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச உரைாற்­று­வ­தற்கு மேடை­யே­றிய வேளை, மெத­மு­ல­ன­வில் ஒன்று கூடி­யி­ருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் கோஷங்கள் எழுப்பி வர­வேற்­றனர்.

இதன்­போது மஹிந்த எமக்கு வேண்டும்”, எமது வீரர் மஹிந்­தவே! , எமது தலைவன் மஹிந்­தவே!, மஹிந்­தவின் ஆட்­சியே எமக்கு தேவை, போன்ற கோஷங்­களை தொடர்ந்து எழுப்­பிய வண்ணம் மக்கள் காணப்­பட்­டனர். மேலும் மஹிந்த ராஜ­பக்சவின் உரு­வப்­படம் அடங்­கிய பதா­கை­களும் ஏந்­தி­ய­வாறு மக்கள் தோற்­ற­ம­ளித்­தனர்.

இதே­வேளை மஹிந்த ராஜ­பக்சவின் விசேட உரையை செவி­ம­டுப்­ப­தற்கு கொழும்­பி­லி­ருந்து வாகன பேரணி வந்­ததன் விளை­வாக தெற்கு அதி­வே­கப்­பா­தையின் மாத்­தறை நுழை­வாயில் அருகில் பெரும் வாகன நெரி­சலும் காணப்­பட்­டது. மெத­மு­லன மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகாமையில் பெருமளவு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தமையினால் பெரும் நெருக்கடிக காணப்பட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

மஹிந்த ராஜபக்சவின் வீட்டு வளாகத்தில் விசேட உரைக்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த மேடையில் 40 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏறுவதற்கு முற்பட்ட போது, மேடை சரிந்து விழும் நிலை ஏற்பட்டமையால் பலர் மேடையை விட்டு இறங்கினர்.

Related

தலைப்பு செய்தி 8513381526524444843

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item