யாழ்.கீரிமலையில் மீள்குடியேற்றத்திற்கு கடற்படையினர் அனுமதி.

யாழ்.கீரிமலை பகுதியில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரும் கடற்படையினரால் மீள்குடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டுவந்த 35 ஏக்கர் நிலம் இ...

யாழ்.கீரிமலை பகுதியில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரும் கடற்படையினரால் மீள்குடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டுவந்த 35 ஏக்கர் நிலம் இன்றைய தினம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியில் 2010 ம் ஆண்டு மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்டபோதும், கடற்படை முகாம் அமைந்துள்ளமையினை காரணம் காட்டி மீள்குடியேற்ற அனுமதி மறுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் நேரில் விஜயம் செய்து அப்பகுதியை பார்வையிட்டார்.

இதனையடுத்து, இன்றைய தினம் கடற்படையினர் மீள்குடியேற்ற அனுமதியை வழங்கியுள்ளனர். இந்நிலையில் 34 குடும்பங்களை சேர்ந்த மக்கள் இந்த நிலத்தில் மீள்குடியேறவுள்ளனர்.



Related

தலைப்பு செய்தி 6193896813452509310

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item