சிங்கள அரசியல் எருமைகளே.. முஸ்லிம்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள். இன்று அரசியல் புராணம் பாடிய ஞானசார தேரர்.

அரசிலில் ஈடுபடும் இந்த நாட்டு சிங்கள எருமைகளுக்கு தேசத்தை ஆக்கிரமிக்கும் முஸ்லிம் அமைச்சர்களிடமிருந்து நாட்டை மீட்குமாறு நாம் கேட்டுக் கொள்க...



அரசிலில் ஈடுபடும் இந்த நாட்டு சிங்கள எருமைகளுக்கு தேசத்தை ஆக்கிரமிக்கும் முஸ்லிம் அமைச்சர்களிடமிருந்து நாட்டை மீட்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இந்த நாட்டிலுள்ள ஹகீம்களும், ரிஷாட்களும் எந்த அரசாங்கம் வந்தாலும் அமைச்சர்களாக வருகின்றனர். மஹிந்தவின் காலத்திலும் இவர்கள் அமைச்சர்களாக இருந்து 9 வருடம் நாட்டை ஆக்கிரமித்தனர். மைத்திரியின் நல்லாட்சிக் காலத்திலும் இவர்கள் அமைச்சர்கள். மஹிந்தவின் காலத்தில் அரைவாசிக் காட்டை அழித்து ஆக்கிரமித்தவர்கள், மைத்திரியின் காலத்தில் மீதியை அழிக்கின்றனர்.

தற்பொழுது ரணில் பிரதமராக வருவார் என்ற எதிர்பார்ப்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டிக்கொண்டுள்ளனர். அஷ்ரப் இருக்கும் போது துறைமுகத்தில் முஸ்லிம்களுக்கு அதிகமான நியமனங்களை வழங்கி பள்ளிவாயலையும் அங்கு கட்டினார்.

நாம் இதனைப் பற்றிப் பேசும் போது இனவாதி என்று எங்களைக் கூறுகின்றனர். இந்த அமைச்சர்களின் செயற்பாட்டில் தனி இனவாதம் மட்டுமேதான் உள்ளன. சகவாழ்வைக் காணமுடியவில்லை.

அதிகார பேராசையின் காரணமாக எமது அரசியல்வாதிகள் இது குறித்து மௌனம் சாதிக்கின்றனர். நாம் பேசினால், எங்களை இது குறித்துப் பேச வேண்டாம் என்று விரல் நீட்டுகின்றனர். இது பௌத்த வாதமல்ல என்கின்றனர்.

நாம் அகிம்சையை உபதேசிக்க வேண்டியவர்கள் என்கின்றனர். இவ்வாறு தான் எமக்கு உபதேசம் புரிய வருகின்றனர் எனவும் தேரர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பழையபடி மீண்டும் அரசியலில் இறங்கி புராணம் பாடினார்.

Related

தலைப்பு செய்தி 4157507064984511224

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item