ஜனாதிபதியை துரோகி என்றவர் கோல்டன் கீ திட்டத்தில் 7 மில்லியன் ரூபா முதலீடு!– ஜனாதிபதியின் சகோதரர்
ஜனாதிபதியாகவுள்ள எனது சகோதரரை துரோகி என அடையாளப்படுத்திய ஒருவர் கோல்டன் கீ திட்டத்தில் ஏழு மில்லியன் ரூபாவினை முதலீடு செய்துள்ளதாக ஜனாதிபதி...
http://kandyskynews.blogspot.com/2015/07/7_17.html

ஜனாதிபதியாகவுள்ள எனது சகோதரரை துரோகி என அடையாளப்படுத்திய ஒருவர் கோல்டன் கீ திட்டத்தில் ஏழு மில்லியன் ரூபாவினை முதலீடு செய்துள்ளதாக ஜனாதிபதியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
49 ஆண்டுகள் அரசியலிலிருந்தே எனது சகோதரர் ஜனாதிபதியாகினார்.
எனது சகோதரரை குற்றம் சுமத்திய நபர் 80களில் பிரான்ஸில் சாரதியாக கடமையாற்றியவர்.
அரச ஊடக நிறுவனமொன்றில் உயர் பதவியொன்றை பெற்றுக்கொள்ள இவர் முயற்சிக்கின்றார் என ஜனாதிபதியின் சகோதரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நபர் காமினி வியன்கொட என ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் தாம் இவ்வாறு பாரியளவு தொகையை கோல்டன் கீ திட்டத்தில் முதலீடு செய்யவில்லை என காமினி வியன்கொட தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate