வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 150 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல்
இந்த வருடம் 150 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இர...

http://kandyskynews.blogspot.com/2015/07/150.html

இந்த வருடம் 150 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்திலும், நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படவிருந்த சந்தர்ப்பத்திலும் தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி கூறியுள்ளார்.
இதற்கமைய சுமார் 31 கிலோகிராம் தங்கம் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.