நிதிக் குற்றவியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சகல கைதுகளையும் ரத்து செய்யுமாறு மேன்முறையீடு

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சகல கைதுகளையும் ரத்து செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய...


நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சகல கைதுகளையும் ரத்து செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 13ம் திகதி பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனினால் நிதி; குற்றவியல் விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டது.

இந்த பிரிவு மற்றும் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட கைதுகளை ரத்து செய்யுமாறு கோரியே மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று ரீட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனு தொடர்பில் முழு அளவில் விசாரணை நடத்தி இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் குறித்த பொலிஸ் பிரிவின் நடவடிக்கைளை இடைநிறுத்துமாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

மக்கள் நலனை கருத்திற்கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, மனுவை தாக்கல் செய்துள்ள எல்லே குணவன்ச மற்றும் காலோ பொன்சேகா ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வறிய மக்களுக்காக தாம் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபருக்கு தனியான ஓர் பிரிவை உருவாக்க அதிகாரமில்லை.

பிரதமர் தலைமையிலான துணைக்குழுவொன்றின் பரிந்துரைகளுக்கு அமைய விசாரணை நடத்தப்படுகின்றது.

எனவே சட்டவிரோதமாக நிறுவப்பட்ட நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பணிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டுமென மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

Related

இரண்டு மாதத்தினுள் தேர்தல்! யானை வெற்றி பெறுவது உறுதி!– விஜேதாஸ ராஜபக்ச

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் 02 மாதத்தினுள் இடம்பெறும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

சந்திரிக்கா ஓய்வுபெற்ற ஜனாதிபதி போல் நடந்து கொள்வதில்லை!– டலஸ் அழகபெரும

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை அழிப்பதனை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நாரஹே...

வித்தியா கொலைவழக்கு சந்தேக நபர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவு!

யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று நடைபெற்ற வித்தியா கொலைவழக்கு விசாரணையில் சந்தேக நபர்கள் 9 பேரையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு நீதிபதி லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார். சும...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item