இன்று நாடு திரும்பும் பசில் ராஜபக்சவை பிரசன்ன ரணதுங்க வரவேற்பார்!

இன்று நாடு திரும்பும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வரவேற்கவுள்ளார் என த...

இன்று நாடு திரும்பும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வரவேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று நாடு திரும்பும் பசில் ராஜபக்சவை, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வரவேற்கவுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அவரைக் கோரவுள்ளதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் விரிவான பேச்சுவார்த்தையொன்றை ஏற்பாடு செய்து தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் பிரசன்ன ரணதுங்க கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

பசில் ராஜபக்சவை மீண்டும் அரசியலில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தமக்குக் கிடையாது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னைய ஆட்சிக் காலத்தில் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பசில் ராஜபக்சவைக் கைதுசெய்ய கடுவெல நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் அவர் இன்று நாடு திரும்பவுள்ளார்.

இந்த நீதிமன்ற உத்தரவுக்கமைய தாம் நாடு திரும்புவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாடு திரும்பும் அவர் கைது செய்யப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

‘திவிநெகும’ நிதியிலிருந்து பல்லாயிரம் மில்லியன் கணக்கில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக அவரது பெயரில் குற்றஞ் சாட்டப்பட்டு அது தொடர்பில் முன் வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Related

பசில் ராஜபக்ஸ தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் நால்வரும் இன்று ...

கொழும்பு முதலிடத்திற்கு வந்தமை குறித்து மகிழ்ச்சியே: மகிந்த

தரம் பிரித்தலின் அடிப்படையில் உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வந்த சுற்றுலா நகரங்களில் கொழும்பு நகரம் முதலிடத்தை பெற்றமை தொடர்பில் தாம் பெருமையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

மஹிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக பொலிஸில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நிர்மலமான தேசத்திற்கான மக்கள் ஊடக மத்திய நிலையத்தினால் நேற்று இந்த முறைப...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item