கடவுச்சீட்டில் பெருவிரல் அடையாளம்: சட்டமூலம் நாளை சமர்ப்பிப்பு
கடவுச்சீட்டில் அதன் உரிமையாளரின் பெருவிரல் அடையாளத்தை கட்டாயமாக்கும் சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இச்சட்டமூலம...


கடவுச்சீட்டில் அதன் உரிமையாளரின் பெருவிரல் அடையாளத்தை கட்டாயமாக்கும் சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இச்சட்டமூலம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, புதிதாக கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் புதுப்பிப்பவர்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கு தமது விரல் அடையாளத்தை வழங்க வேண்டும்.
சர்வதேச விமான சேவை பரிமானங்களுக்கு அமைய இந்த சட்டம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.