தரைமட்டமான தீவிரவாத முகாம்கள்: சிரியாவில் குண்டுமழை பொழிந்த கனடா
சிரியாவில் முதல் முறையாக கனடிய போர் விமானங்கள் நேற்று குண்டுவீச்சை நடத்தியுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தன...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_662.html

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா(America), பிரான்ஸ்(France),ஜேர்மனி(Germany), பிரித்தானியா(Britain) உ ள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சிரியாவின் ரக்கா(Raqqa) நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் அவர்களின் அணிவகுப்புகளை குறிவைத்து இரண்டு கனடிய போர் விமானங்கள் முதன்முறையாக குண்டுவீச்சை நடத்தியுள்ளன.
அதிநவீன 2–சி.எப்.18– (CF-18) வகை விமானங்களை கொண்டு இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
மேலும் முக்கிய இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடந்ததாகவும், இதனால் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.