ISIS உடன் சேர்வதற்கென சிரியா நோக்கிச் செல்ல முயன்ற 3 பிரிட்டன் இளவயதினர் கைது

ISIS போராளிகளுடன் சென்று சேரும் நோக்கத்தில் பிரிட்டனில் இருந்து சிரியா நோக்கிச் செல்ல முயன்ற 3 இளவயதினர்  துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லி...


ISIS போராளிகளுடன் சென்று சேரும் நோக்கத்தில் பிரிட்டனில் இருந்து சிரியா நோக்கிச் செல்ல முயன்ற 3 இளவயதினர்  துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் தடுக்கப் பட்டு உடனடியாக பிரிட்டனுக்குத் திருப்பப் பட்டுள்ளனர்.

மேலும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முயன்ற சந்தேகத்தின் பேரில் இவர்களைத் தாம் கைது செய்திருப்பதாக பிரிட்டன் போலிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

கைது செய்யப் பட்ட மூவரும் தற்போது மத்திய இலண்டன் போலிஸ் நிலையத்தில் கஸ்டடியில் வைக்கப் பட்டுள்ளனர். இவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப் படாத நிலையில் இருவர் 17 வயதுடைய வடகிழக்கு இலண்டனைச் சேர்ந்தவர்கள் எனவும் எஞ்சியவர் 19 வயதுடையவர் எனவும் தெரிய வந்துள்ளது. வெள்ளிக்கிழமை தடுத்து வைக்கப் பட்ட இவர்கள் மூவருமே பிரிட்டன் குடியுரிமை உடையவர்களாக இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த இளவயதினரின் குடும்பத்தினருக்கு இவர்கள் குறித்த தகவல்கள் அளிக்கப் பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளில் இருந்து ISIS உடன் சென்று சேரும் நோக்கில் இரகசியமாகப் புறப்பட்டுச் செல்லும் இளவயதினரின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகரித்து வருவது அந்நாடுகளின் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த மாதம் தான் 3 பிரிட்டிஷ் பள்ளி மாணவிகள் துருக்கிக்குச் சென்று அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப் பட முன்னரேயே எல்லையைக் கடந்து சிரியாவுக்குள் நுழைந்து இருந்ததாகவும் இம் மாணவியரை இனி மீட்பது கடினமான செயல் எனவும் பிரிட்டன் அறிவித்திருந்தது. மேலும் இச்சம்பவத்தின் போது துருக்கி அதிகாரிகள் விரைவாக செயற்பட்டு அம்மாணவியரைத் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருந்தது.

இதுவரை சுமார் 700 பிரிட்டன் பிரஜைகள் பெரும்பாலும் ISIS உடன் இணைவதற்காக சிரியாவுக்குச் சென்றிருப்பதாகப் பிரிட்டன் போலிஸ் தெரிவிக்கின்றது. மேலும் இவர்கள் பிரிட்டனுக்குத் திரும்பும் பட்சத்தில் பிரிட்டனுக்குள் தாக்குதல்களைத் தொடுப்பதற்கான ஆபத்தும் அதிகரித்திருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். வளர்ந்து வரும் இணையத் தொழிநுட்பமும் சமூக ஊடகங்களும் இளம் வெளிநாட்டினரை சிரியாவுக்குள் உள்ள தீவிரவாதிகளுடனான தொடர்பை எளிதாக்கி வளர்த்து விட்டதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related

குர்ஆனை எரித்த பெண்ணை அடித்து தீயிலிட்ட பொதுமக்கள்

புனித நூலான குர்ஆனை எரித்த27 வயது பெண்ணுக்கு ஆப்கானிஸ்தானில் மக்கள் எரித்துக் தண்டனை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த நாட்டின் தலைநகரான காபூலில் நடந்துள்ளது. புனித நூலான குர்ஆன...

ஜேர்மனியில் ஐரோப்பிய மத்திய வங்கித் திறப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வன்முறையானது!

ஜேர்மனியின் ஃப்ராங்ஃபேர்ட் நகரில் புதிய ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமையகத் திறப்பு விழாவை எதிர்த்து நிகழ்த்தப் பட்ட சிக்கன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் போலிசாருடனான மோதல்களை அடுத்து வன்முறையாக வெடித்தது....

18 ஆண்டிற்கொருமுறை இயற்கை அதிசயம் - பெருந்திரளாக உல்லாசப்பணிகள்!! (காணொளி)

பிரெத்தோன் - நோர்மோந்திக் (Bretagne - de Normandie)  கடற்கரைப் பரப்புகளில் பெரும் பேரலைக் காட்சியொன்று இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது. இதனைக் காண்பதற்காக நாளை முதல் இந்தப் பகுதியில் பல ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item