நாம் கேட்பது இதுதான் – பொதுபலசேனா

சிங்­கள பௌத்த நாட்டில் எ தற்­காக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட­வேண்டும்? 8 கோடி தமி­ழர்கள் வாழும் இந்­தி­யாவில் கூட தமிழில் தே...



சிங்­கள பௌத்த நாட்டில் எ
தற்­காக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட­வேண்டும்? 8 கோடி தமி­ழர்கள் வாழும் இந்­தி­யாவில் கூட தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை என்று பொது­பல சேனா அமைப்­பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இன்று தமிழில் தேசிய கீதம் கேட்­ப­வர்கள் நாளை தமிழ் தேசத்­தினை கேட்­பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.பொது­பல சேனா அமைப்­பினால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்­டி­ருந்த போதே அவ்­வ­மைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பிட்­டதாவது,

இலங்­கையின் அர­சியல் அமைப்­பினுள் அரச கரும நிகழ்­வு­களில் தமிழ்­மொழி மூலம் தேசிய கீதத்­தினை இசைப்பது அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வில்லை. எனினும் தற்­போது தமிழ்­மொ­ழியில் தேசிய கீதம் பாடப்படவேண்டுமென்று புதிய கருத்­தினை முன்­வைத்து வரு­கின்­றனர். நாம் கேட்­பது என்­ன­வெனின் பௌத்த சிங்­கள நாட்டில் எதற்­காக தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்பதாகும். இங்கு பௌத்த கொள்­கை­க­ளையும் உரி­மை­களையும் மதிக்­க­வேண்டும்.

எமது அயல் நாடான இந்­தி­யாவில் பல மாநி­லங்கள் உள்­ளன. தமிழ் நாட்டின் 8 கோடிப்பேர் வாழ்­கின்­றனர். அதேபோல் வெவ்­வேறு மொழி­பேசும் மக்கள் வாழ்­கின்­றனர். ஆனாலும் இந்­தி­யாவில் எல்லா மாநி­லங்­க­ளிலும் எந்த நிகழ்­வா­னாலும் அங்கு ஒரு மொழியில் மட்­டுமே தேசிய கீதம் பாடப்படும். இந்­தி­யாவில் அவ்­வா­றான­தொரு நிலைமை இருக்­கையில் இலங்­கையில் மட்டும் ஏன் இரு மொழி­களில் தேசிய கீதம் பாடப்படவேண்டும். இலங்­கையில் எப்­போதும் ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்­பது கட்­டா­ய­மாக்­கப்­பட வேண்டும்..

மேலும் இன்று தமிழ்­மொழி மூலம் தேசிய கீதம் பாட­வேண்டும் என கேட்கும் தமிழ் பிரி­வி­னை­வா­திகள் நாளை தமிழ் தேசத்­தி­னையே கேட்­பார்கள். எனவே இச்­செ­யற்­பா­டு­க­ளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்க கூடாது.

அதேபோல் அண்­மையில் சிகி­ரி­யாவில் புரா­தான சின்­னங்­களை சேதப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் தமிழ் யுவதி ஒருவர் கைது செய்­யப்­பட்ட விடயம் தொடர்பில் நாம் எமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­து­கின்றோம். தமிழ் சிறு­மிக்கு சிங்­கள பாஷையை வாசிக்க கடி­ன­மாக இருந்­தி­ருக்­கலாம். அதேபோல் யுவதியின் குடும்பம் மிகவும் வறு­மை­யா­னது.இவ்­வா­றா­ன­தொரு நிலை­மையில் அப்­பாவி யுவதியை­ கைது செய்­வது மனி­தா­பி­மா­னத்­திற்கு அப்­பாற்­பட்ட செயற்­பா­டாகும். இவ்­வா­றான தவ­றுகள் நடை­பெ­று­வதை தடுக்க வேண்டும் இவை சிங்­கள மக்­களின் சொத்­துக்கள் மட்­டு­மல்ல இது தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­னதும் உரி­மைகள், எனவே அதை அனை­வரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

எனினும் ஒரு யுவதியை கைது செய்து சிறையில் அடைப்பது கண்டிக்கத்தக்க விடயம். எனவே உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த யுவதியை விடுதலை செய்து சமூகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

Related

குவைத்தில் உயிரிழந்த மட்டு.யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை

குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்...

மத்திய மாகாண சபைக்கு புதிய முதலமைச்சர்?

மத்திய மாகாண முதலமைச்சராக திலின பண்டார தென்னக்கோனை நியமிக்குமாறு கோரி மாகாண சபையின் 30 ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆளுநரிடம் சத்திய கடதாசி கையளித்துள்ளனர். சத்திய கடதாசி வழங்கிய உறுப்பி...

கோத்தபாய - பசிலை கைது செய்ய நடவடிக்கை!

பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு, தேசிய நிறைவேற்றுப் பேரவையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.அவன்ட் ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item