ஜிகாதி கணவனின் பிடியில் சிக்கிய கர்ப்பிணி பெண் கதறல்

  சுவிசை சேர்ந்த ஜிகாதி கணவனை தேடிச் சென்ற அவரது மனைவி பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளார். சுவிசின் துர்கவ்(Thurgau)பகுதியை சேர்ந...

 
சுவிசை சேர்ந்த ஜிகாதி கணவனை தேடிச் சென்ற அவரது மனைவி பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளார்.
சுவிசின் துர்கவ்(Thurgau)பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மனியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
வெவ்வேறு மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறிய இத்தம்பதியினர் சுவிசில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டில் இணையதளம் மூலமாக அந்த நபர், அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, ஜிகாதியாக மாற விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதன்பின் தனது கர்ப்பிணி மனைவியை விடுத்து, துருக்கி வழியாக சிரியாவிற்கு பறந்த அவர், அல்கொய்தா இயக்கத்தின் al-Nusra Front என்ற பிரிவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தன் கணவனை தேடி கடந்த அக்டோபர் மாதம் அப்பெண் சிரியாவிற்கு சென்றுள்ளார்.
ஆனால் தன் மனைவியை சிறைபிடித்த அந்நபர், தற்போது தாக்குதல்கள் அதிகம் நடக்கும் Idlib பகுதியில் அவரை பிணைக்கைதியாக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள அப்பெண் தன் பெற்றோருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, நாடு திரும்ப எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது. ஆனால் என்னுடைய கணவன் என்னை சிறைபிடித்துள்ளார்.
எனவே என்னை காப்பாற்ற நடவடிக்கைகளை எடுங்கள் என கண்ணீருடன் பேசியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சிகள் சுவிட்சர்லாந்த் மற்றும் ஜேர்மனியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் பரபரப்பாக ஒளிப்பரப்பின.

Related

பிரித்ததானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்!

பிரித்தானியாவில் முன்னணி அரசியல்வாதியான இலங்கைப் பெண் ஒருவர் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார். 1979ம் ஆண்டு பிறந்த 36 வயதான சமலி பெர்னாண்டோ, என்பவரே இந்த இலங்கை...

பானிப்பூரி சாப்பிட்டவர்களை கூட்டிப் போய் கொன்றார்கள் – என்கவுண்டரிலிருந்து தப்பிய 3 பேர் “பகீர்”!

வேலூர்: திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கட்டைகளை கடத்தியதாக 20 தமிழர்களை ஆந்திரா போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் உயிர் தப்பி வந்த 3 பேர் பரபரப்பு தகவல்களை அளித்துள்ளனர்.  இந்த...

கிறிஸ்துவர்களை கட்டாயப்படுத்தி கொல்லும் அவலம்: இஸ்லாமியர்களின் வெறிச்செயல்

லிபியாவில் இருந்து தப்பிச்சென்ற படகில் பயணித்த இஸ்லாமியர்கள், 12 கிறிஸ்துவர்களை கடலில் தள்ளி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அங...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item