எதிர்வரும் 17ஆம் திகதியின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான முன்னணி ஆயத்தமாகவதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் சந...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பொலனறுவை முஸ்லிம் பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொலனறுவை மாவட்ட முஸ்லிம்கள் தமக்கு வழங்கிய அமோக ஆதரவு குறித்து ஜன...
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று வரை 92 பேர் கொலை செய்யப்பட்டுள்ளர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவ...
இலங்கையில் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான நிவாரணங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் போதிய அளவுக்கு கிடைக்கவில்லை எனும் கவலைகள் தொடருவதாக பலர் தெரிவித்துள்ளனர்.
முப்பது வருடங்களாகத் த...
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் சடலம் சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது.தெஹிவளை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியிலிருந்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.பொலிஸ் பாதுகாப்புக்கு மத்...
இரண்டாவது உலகப் போரின்போது, 70 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்கப் படைகளால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பானிய போர்க் கப்பலான முசஷியை கடலடியில் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்கக் கோடீஸ்வரர் பால் ஆலன் அறிவித்துள்ளார்.
இதுவரை கட்டப்பட்ட போர்க் கப்பல்களிலேயே மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றாக முசாஷி கருதப்படுகிறது.
தனக்குச் சொந்தமான அகழ்வாராய்ச்சி அணி இந்த கப்பலைக் கண்டுபிடித்திருப்பதாக ஆலன் கூறியிருக்கிறார்.
பிலிப்பைன்ஸிற்கு அருகில் உள்ள சிபுயான் கடலில் ஒரு கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட ஆழத்தில் இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூழ்கடிக்கப்பட்டு 70 ஆண்டுகளுக்குப் பிறகு முசாஷி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
முசாஷியும் அதனுடைய துணைக் கப்பலான யமாடோவும்தான் இதுவரை கட்டப்பட்ட போர்க் கப்பல்களிலேயே மிகப் பெரியவை.
லெய்ட் வளைகுடா யுத்தத்தின்போது, 1944ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று அமெரிக்க யுத்த விமானங்கள் முசாஷியை மூழ்கடித்தன.
இரண்டாவது உலகப் போரின் மிகப் பெரிய கடல் யுத்தம் இது என வர்ணிக்கப்படுகிறது.
சிறு பையனாக இருந்த காலத்திலிருந்தே இரண்டாவது உலகப் போர் வரலாறு தன்னை ஈர்த்துவந்ததாகக் கூறியிருக்கும் ஆலன், எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தக் கப்பலைத் தேடும் பணியைத் துவங்கினார்.
தானாக கடலடியில் இயங்கக்கூடிய வாகனத்தின் மூலம் பிலிப்பைன் தீவுக்கூட்டத்தின் மத்தியில் இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிது. கடலடியை முழுமையாக ஆய்வு செய்தபிறகு ஆலனின் ஆய்வுக் குழுவினர் இந்தப் பணியில் இறங்கினர்.
கடலடியில் ஒரு கிலோ மீட்டருக்குமே மேற்பட்ட ஆழத்தில் மூழ்கியிருக்கும் முசாஷியின் வால்வுகளில் ஒன்று.
முசாஷியின் துணைக் கப்பலான யமாடோ, இந்த யுத்தத்தில் சேதமடைந்தது என்றாலும், ஒரு வருடத்திற்கு பிறகுதான் ஒகினாவாவுக்குச் செல்ல முயற்சித்தபோது, மூழ்கடிக்கப்பட்டது.
முசாஷி கப்பலின் இறுதி நாட்களில் அந்தக் கப்பல் மீது தொடர்ச்சியாக அமெரிக்க விமானங்கள் தாக்குல் நடத்தின.
போதுமான அளவு விமானப் படை பாதுகாப்பு இல்லாத நிலையில், சக்தி வாய்ந்த கப்பலாக இருந்தாலும்கூட முசாஷி மூழ்கடிக்கப்பட்டது.
மூழ்கிக்கிடந்த முசாஷியை தன் சொந்த முயற்சியில் கண்டுபிடித்திருக்கும் கோடீஸ்வரர் ஆலன், இந்தப் படங்களை வெளியிட்டுள்ளார்.
ஒரு பிற்பகல் வேலையில் இந்தக் கப்பல் மீதான தாக்குதல் முடிவடைந்தது. அப்போது, 20 டார்பீடோ வகை குண்டுகளாலும் 17 பீரங்கிக் குண்டுகளாலும் கப்பல் தாக்கப்பட்டிருந்தது.
மாலை மயங்க ஆரம்பித்தபோது, கப்பல் மூழ்க ஆரம்பித்தது. அதிலிருந்த வீரர்களில் 1,000 பேர் உயிரிழந்தனர்.
சியாட்டிலில் பிறந்த ஆலன், 1975ல் பில் கேட்சுடன் இணைந்து மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தைத் துவங்கினார். உலகில் 51வது பணக்கார மனிதராக தற்போது ஆலன் கருதப்படுகிறார். அவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 11.4 பில்லியன் பவுண்டுகள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை கூறியிருக்கிறது
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளைத் தேடும் பணியினை பெண் தீவிரவாதிகள் செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் ஆண்களைப்...
குவைத்தில் காதலியை பார்க்க காதலர் பர்தா அணிந்து சென்றுள்ளதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்தில் குவைத்தில் உள்ள அல் இமாம் அல் சித்திக் மசூதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகினர்,...
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸை கடனில் இருந்து மீட்க ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வ தேச நிதியம் ஆகியவை பரிந் துரைத்த கடன் மீட்புத் திட்டத்தை அந்நாட்டு மக்கள் நிராகரித்தனர...