உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட 5 இந்திய போர் விமானங்கள் மாயம்?

உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் ஐந்து AN-32 ரக போர் விமானங்கள் மாயமாகிவிட்டதாக ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. கடந்த 20...

உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் ஐந்து AN-32 ரக போர் விமானங்கள் மாயமாகிவிட்டதாக ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி உக்ரைனின் கீவ் மாகாணத்தை சேர்ந்த ஆண்டோநாவ் பிளாண்ட்டுக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான 40 AN-32 ரக போர் விமானங்கள் அப்கிரேடு செய்வதற்காக அனுப்பட்டது. இதன் கடைசி லாட்டாக 5 போர் விமானங்கள் அனுப்பட்டது. ஆனால், நீண்ட காலமாகியும் விமானம் அப்கிரேடு செய்யப்பட்டு திரும்பாததால் மாயமாகிவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 64 போர் விமானங்கள் உள்நாட்டிலேயே அப்கிரேடு செய்யப்பட்டு வருகிறது. உக்ரைனுடன் போடப்பட்ட ஒப்பந்தம் சுமார் 400 மில்லியன் டாரல்கள் வணிக வாய்ப்பு கொணடதாகும். வரும் 2017-ம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தம் பயன்பாட்டில் இருக்கும். AN-32 போர் விமானங்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. அவற்றை வாங்கியுள்ள இந்தியா அந்த விமானங்களை அப்கிரேடு செய்வதற்காக உக்ரைனுக்கு அனுப்பி வருகிறது. விமானத்தின் காக்பிட்டை நவீனமாக்குவது, விமானத்தின் கெப்பாசிட்டியை 6.7 டன்களிலிருந்து 7.5 டன்களாக அதிகரிப்பது, விமானத்தின் ஆயுளை 25 ஆண்டுகளிலிருந்து 40 ஆண்டுகளாக அதிகரிப்பதற்காக அப்கிரேடு செய்யப்படுகிறது.

அண்மையில், இந்திய பாதுகாப்புதுறை மந்திரி மனோகர் பரிக்கர் கூறும்போது, உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் தற்போது பிரச்சனை நிலவி வருவதால், அங்கு ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால்தான், அந்த 5 விமானங்களையும் அப்கிரேடு செய்யும் வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

Related

உலகம் 4251359756144783826

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item