20 வருடங்களாவது தற்போதைய ஆட்சி நாட்டில் நீடிக்கவேண்டும்: சந்திரிகா அவா
தற்போதைய அரசாங்கம் இதே போன்று இன்னும் 20 வருடங்கள் நீடிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இ...
http://kandyskynews.blogspot.com/2015/03/20.html

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து தற்பொழுது செயற்பட்டு வருகின்றது, இதன் போது ஒரு கட்சிக்கு தேவையானதை அந்த கட்சியோ அல்லது மற்ற கட்சிக்கு தேவையானதை அந்த கட்சியோ மாற்றியமைக்க முடியாது.
குறைந்த பட்சம் 20 வருடங்களாவது தற்போதைய ஆட்சி நாட்டில் நீடிக்கவேண்டும், இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படும் முறையினை நாட்டில் ஸ்தாபித்தால் எதிர்காலங்களில் யார் வந்தாலும் இவ் முறையினை மாற்ற முடியாது.
மேலும் இவ்வாறான ஆட்சியை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு மக்களின் ஆதரவு, எங்களுக்கு மிகவும் அவசியம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate