பரிசில் எரிக்கப்பட்ட கொடி!!
நான்கு யூதர்கள் அமெலி குலிபாலியினால் பயங்கரவாதப் படுகொலை செய்யப்பட்ட, பரிஸ் பன்னிரண்டில் உள்ள HyperCacher இன் முன்னர் வைத்து, இன்று, ஒரு 38...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_778.html
நான்கு யூதர்கள் அமெலி குலிபாலியினால் பயங்கரவாதப் படுகொலை செய்யப்பட்ட, பரிஸ் பன்னிரண்டில் உள்ள HyperCacher இன் முன்னர் வைத்து, இன்று, ஒரு 38 வயதுடையவர் இஸ்ரேலின் கொடியை எரித்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் ஏற்கனவே பொதுமக்கள் சொத்துக்களிற்குச் சேதம் விளைவித்த குற்றத்திற்காகத் தண்டனை பெற்றிருந்தவர் என்றும், இவர் «சட்டவிரோத நடவடிக்கையில்» ஈடுபட்ட குற்றத்திற்காகக் கைது செய்ய்பட்டுள்ளார் என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
DOPC எனப்படும் பொதுமக்கள் சட்ட ஒழுங்கிற்கான காவற்துறையினரின் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதுவரை தனது செயலிற்கான காரணம் எதையும இவர் கூறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate