கிழக்கு மாகாண சபையையும் கைப்பற்றுகிறது கூட்டமைப்பு!
கிழக்கு மாகாண சபையில் விரைவில் ஆட்சி மாற்றம் ஒன்றுஏற்படவுள்ளது.ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமையவுள்ள கிழக்குமாகாண கூட்டணி அரசுக்கும் தமிழ்த் த...

இது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக இரா.சம்பந்தன் தலைமையிலானதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸினரும் இன்று வியாழக்கிழமை சந்திப்பு ஒன்றைநடத்துகின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சதலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணிஉடைவுற்றது.
அதனைத் தொடர்ந்து அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி நடத்திய கிழக்கு மாகாணத்திலும் ஆட்சி மாற்றம்ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
இதேவேளை கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சி வரிசையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11, ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் 7 உறுப்பினர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் கிழக்கு மாகாண சபையில் வரும் 20 ஆம் திகதி ஆட்சி மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.