இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்
நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 15பேரும் இன்று நாடு திரும்புகின்றனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சா...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_851.html
நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 15பேரும் இன்று நாடு திரும்புகின்றனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கைக் கடற்படையினரால் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் கடந்த 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். எனினும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கிடைத்த அனுமதியியை அடுத்து கடந்த 16ஆம் திகதி குறித்த இந்திய மீனவர்கள் 15பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் இந்திய துணைத்தூதரகத்தினால் இன்று காலை காங்கேசன்துறையில் வைத்து இலங்கைக்க கடற்படையினரிடம் கையளித்துள்ளனர். இன்று பிற்பகல் அவர்களது சொந்த ஊரான புதுச்சேரியை சென்றடைவார்கள் என்றும் யாழ். இந்திய துணைத்தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=877633823621243286#sthash.ftWefszh.dpuf


Sri Lanka Rupee Exchange Rate