மஹிந்தவின் குடும்பம் பிரிந்தது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினுள் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக அவரது மனைவி ஷிரந்தி, தனியாகப் பிரிந்து வசிப்பதாக தெரிய வந்...

Shiranthi+WickremasingheMahindra+Rajapaksa+-2TE3TI_4KQl

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினுள் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக அவரது மனைவி ஷிரந்தி, தனியாகப் பிரிந்து வசிப்பதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினுள் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜனாதிபதி மாளிகையிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ மட்டும் தனியாகப் புறப்பட்டு ஹம்பாந்தோட்டைக்குப் புறப்பட்டுள்ளார்.

அவர் ஹம்பாந்தோட்டைக்குச் சென்றடைந்த பின்னரும் ஷிரந்தி ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டைக்குப் போகவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் கொழும்பு அருகேயுள்ள ஒரு மாளிகையில் தனது மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷவுடன் ஷிரந்தி தனியாக வசித்துக் கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்தவுக்கு நெருக்கமான சிலர் ஷிரந்தியை சமாதானப்படுத்த முயற்சிகளை மேற் கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே புனித பாப்பரசரின் வருகையின் போது அவரைச் சந்திக்கும் சாக்கில் ஷிரந்தியுடன் சமாதானமாகும் முயற்சிகளில் மஹிந்த ராஜபக்ஷ நேரடி முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அரசாங்க விடயங்களில் முக்கியத்துவம் வழங்கியமை காரணமாகவே மஹிந்த தோற்றுப் போக காரணமாக அமைந்தது என்பதுதான் ஷிரந்தியின் கோபத்துக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

2005ம் ஆண்டின் ஆரம்பம் தொட்டே கோத்தபாய மற்றும் பசில் ஆகியோரின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 6559645832687756985

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item