ஊழல்,மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் : நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ

ஊழல், மோச­டி­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­கான புதிய சட்­டங்­களை விரைவில் பாரா­ளு­மன்­றத்தில்...

110708094844_jp_notw512x288_nocreditஊழல், மோச­டி­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­கான புதிய சட்­டங்­களை விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் முன் வைத்து நிறை­வேற்­ற­வுள்­ள­தாக நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

தமிழ் அர­சியல் கைதிகள் விரைவில் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்­க­ளென்றும் அதற்­காக விசேட குழு அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அமைச்சர் கூறினார்.

கடந்த ஆட்­சியில் 2100 கோடி ரூபா ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­தா­க குற்றம் சாட்டப்படுவதுடன் பல்­வேறு உயர் பத­வி­களை வகித்­த­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் ஊழல்,மோச­டிகள் தொடர்­பாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு லஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­விலும் பல்­வேறு முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இவை தொடர்­பாக நீதி­ய­மைச்சின் வகி­பாகம் எவ்­வாறு இருக்கும் என கேட்ட போதே நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இது தொடர்­பாக மேலும் தெரி­விக்­கையில்;

கடந்த கால ஆட்­சியில் பாரிய ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. இவை தொடர்­பாக முறைப்­பா­டுகள் தினம் தினம் கிடைத்து வரு­கின்­றன. நாட்டு மக்­களின் பணத்தை சூறை­யா­டி­ய­வர்­களை சும்மா விட முடி­யாது.

நாட்டில் ஊழல் மோச­டிகள் இல்­லாத சட்டம் ஒழுங்­கு­ட­னான நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஆட்சி மாற்­றத்தை ஐ.தே. க. தலை­மையில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

எனவே மக்­க­ளுக்கு நாம் வழங்­கிய உறுதி மொழி­களை நிச்­ச­ய­மாக நிறை­வேற்­றுவோம். கடந்த கால ஆட்­சியில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­களை விசா­ரிப்போம். இதன் போது உயர்­மட்டம், கீழ்­மட்டம் என தரா­தரம் பார்க்க மாட்டோம். சட்­டத்தின் முன் அனை­வரும் சம­மா­ன­வர்­களே ஆகும். குற்றம் செய்தோர் நிச்­சயம் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள்.

ஊழல் மோச­டி­களை விசா­ரணை செய்­வ­தற்­காக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் பிர­தான குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு எனது தலை­மை­யிலும் உப குழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. இரு குழுக்­க­ளிலும் தலா 8 உறுப்­பி­னர்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதற்கு மேல­தி­க­மாக இக்­குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிப்­ப­தற்­கான பொறுப்பு லஞ்ச ஊழல் திணைக்­க­ளத்­தி­டமும் இர­க­சிய பொலி­ஸா­ரி­டமும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னூ­டா­கவும் விசா­ர­ணைகள் நடாத்­தப்­படும். எனவே மோச­டி­களில் ஈடு­பட்டோர் எவ­ராயினும் தப்­பிக்க முடி­யாது போகும். அனை­வரும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­ப­டு­வார்கள்.

அது மட்­டு­மல்­லாது இம் மோச­டி­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு கடு­மை­யான தண்­ட­னைகள் வழங்­கு­வ­தற்­காக புதிய சட்­டங்கள் பாரா­ளு­மன்­றத்தில் முன் வைக்­கப்­பட்டு அவ­ச­ர­மாக நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளன.

வெளி­நா­டு­களில் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்ள கறுப்பு பணம் மற்றும் சொத்­துக்கள் தொடர்­பா­கவும் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தோடு அதற்­காக அந்­தந்த நாடு­களின் ஒத்­து­ழைப்­பையும் பெற­வுள்ளோம்.

விசே­ட­மாக இந்­தி­யாவின் மத்­திய வங்­கியின் உதவி நாடப்­படும். தற்­போது சீசெல்ஸ் நாடும் இதற்­கான ஒத்­து­ழைப்பு வழங்க முன்­வந்­துள்­ளது.

போதைப்­பொருள்

போதைப்­பொ­ருட்கள் கடத்தல், விற்­பனை போன்­ற­வற்றை தடுப்­ப­தற்கு தற்­போது நாட்­டி­லுள்ள சட்­டங்கள் போது­மா­னவை. ஆனால் அச்­சட்­டங்கள் இது வரையில் சரி­யான முறையில் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இனிமேல் சட்­டங்கள் சரி­யான வழியில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். போதைப்­பொ­ருட்கள் கடத்­தலை தடுப்­ப­தற்­காக எமது அமைச்சின் கீழ் விசேட வேலைத்­திட்­ட­மொன்றும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

அர­சியல் கைதிகள்

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட கவனம் செலுத்­தி­யுள்ளார். தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ரு­ட­னான சந்­திப்­பிலும் இது தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

இது தொடர்பில் ஜனா­தி­பதி பணிப்­பு­ரையில் விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை துரிதப்படுத்தப்படும். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக விசாரணைகளும் துரிதப்படுத்தப்படும். குற்றமற்றவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள்.

ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுக்களில் மட்டுமல்லாது பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை அரசிற்கு நேரடியாகவும் சமர்ப்பிக்க முடியுமென்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்

Related

தைவான் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்து; 12 பேர் பலி

[caption id="" align="aligncenter" width="660"] விமானம் ஆற்றில் விழும்போது அவ்வழியாகச் சென்றவர்களால் பதிவுசெய்யப்பட்ட வீடியோவின் சில காட்சிகள்[/caption] . தைவான் நாட்டின் தலைவர் தைபெய்யில் ட்ரான்ஸ் ஏ...

சென்னையை சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் சிரியா எல்லையில் கைது! தீவிரவாதிகளுக்கு உதவசென்றனரா?

துருக்கி வழியாக சிரியாவுக்குள் ஊடுருவ முற்பட்ட 9 பேரிடம் பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைவதற்காக இவர்கள் பெங்களூருவில் இருந்து சிரியா என்றதாக சந்தேகிக்கப்பட...

விமானி உயிரோடு எரித்துக் கொலை- ஐ.எஸ்.க்கு பதிலடியாக இரு தீவிரவாதிகளைதூக்கிலிட்டது ஜோர்டான்!!

[caption id="" align="aligncenter" width="418"]                     ஜோர்டானிய விமானி முவாத் கசாஸ்பே[/caption] பிணைக் கைதியாக பிடித்து வைத்த ஜோர்டான் ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item