ஆஸ்திரேலியர்கள் ஈராக்கில் உள்ள மொசூல் நகருக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

     ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்து உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்க...

    

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்து உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளின் படைகள் ஈடுபட்டு உள்ளன.  இந்தநிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில சிறுபான்மை இனத்தினர் ஈராக்கில் உள்ள மொசூல் நகருக்கு சென்று, ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பில் சேர்ந்து செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மொசூல் நகருக்கு ஆஸ்திரேலியர்கள் செல்ல தடை விதித்து ஆஸ்திரேலியா உத்தரவிட்டு உள்ளது.



இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜூலி பிஷப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள தீவிரவாத குழுக்களில் ஆஸ்திரேலிய இளைஞர்கள் இணைவதை தடுக்க அரசு முடிவு செய்து உள்ளது. எனவே, ஆஸ்திரேலியர்கள் ஈராக்கில் உள்ள மொசூல் நகருக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியர்கள் சிரியாவில் உள்ள ரக்குயா நகருக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related

உலகம் 1895608377894821125

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item