முஸ்லிம் குடுபத்திற்கு வழங்கப்பட்ட வீடு ;மகிந்த தேசப்பிரிய – ரவியிடம் கேள்வி

தேர்தல் காலத்தில் வீடு ஒன்றை அன்பளிப்பாக வழங்கியமை குறித்து தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் க...


ELECTION
தேர்தல் காலத்தில் வீடு ஒன்றை அன்பளிப்பாக வழங்கியமை குறித்து தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் கபில கமகேயின் முறைப்பாட்டுக்கு இணங்கவே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை புளுமெண்டல் வீதியில் தமது பிரசாரக்கூட்டத்தின்போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமான பெண்ணின் குடும்பத்துக்கே இந்த வீடு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலுடனேயே இந்த வீட்டை அன்பளிப்பாக வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு உரிய வீடு இருக்கவில்லை. இதனைக்கருத்திற்கொண்டு மனிதாபிமான ரீதியிலேயே வீடு ஒன்றை அன்பளிப்பாக வழங்கியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே இது கப்பமாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

தலைப்பு செய்தி 2137731318190280002

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item