பிர­த­ம­ரா­வது உறு­தி­யா­கி­விட்­டதால், மஹிந்­தவை இன­வா­தி­யென முஸ்­லிம்­க­ளி­டையே சித்­த­ரிப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய கட்சி முயற்சி.

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ பிர­த­ம­ரா­வது உறு­தி­யா­கி­விட்­டது. இதனை சீர்­கு­லைப்­ப­தற்­காக அவரை ஓர்...

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ பிர­த­ம­ரா­வது உறு­தி­யா­கி­விட்­டது. இதனை சீர்­கு­லைப்­ப­தற்­காக அவரை ஓர் இன­வாதி என ஐக்­கிய தேசியக் கட்சி, முஸ்­லிம்கள் மத்­தியில் பொய்யை கட்­ட­விழ்த்­து­விட முயற்­சித்து வரு­வது மிகவும் கண்­டிக்­கத்­தக்­கது என்று முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரி­வித்தார்.

குரு­நாகல் ஜாமி உல் அஸ்ஹர் பெரிய பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற மஹிந்த ராஜபக் ஷவுக்­கான வர­வேற்பு நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

குருநாகல் மாவட்ட முஸ்லிம் மக்கள் பெரும்­பான்மை சகோ­தர மக்­க­ளோடும், தமிழ் மக்­க­ளோடும் ஒன்று சேர்ந்து வேட்­பாளர் மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக்­கு­வ­தற்கு கங்­கணம் கட்­டிக்­கொண்டு செயற்­பட முனைந்­துள்­ளனர் என்­பது இந்த மாவட்­டத்தில் பல இடங்­க­ளுக்கு சென்று வரும் போது அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

மஹிந்த ராஜபக் ஷ ஓர் இன­வாதி என இனங்­காட்­டு­வ­தற்கு ஐக்­கிய தேசி­யக்­கட்சி முனைந்து வரு­வது ஒரு கேலிக்­கூத்­தான விட­ய­மாகும்.

ஐ.தே.க.வின் இந்த முயற்சி ஒரு­நாளும் வெற்றி பெறப் போவ­தில்லை. இது ஒரு வீணான முயற்சி என்­பது ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடை­பெற உள்ள பொதுத் தேர்தல் நாட்டு மக்­க­ளுக்கு நன்றே உணர்த்தும்.

மஹிந்த ராஜபக் ஷ அம்­பாந்­தோட்டை மாவட்­டத் தின் மெத­மு­லன கிரா­மத்தில் பிறந்தார்.

அவ­ரு­டைய வீட்டை தொட்டு நிற்கும் வயல் வெளிக்கு அப்பால் இருப்­பது யக்­கஸ்­முல்ல எனும் முஸ்லிம் கிரா­ம­மாகும். அம் மக்­க­ளோடும் ஏனைய கிரா­மத்தில் உள்ள மக்­க­ளோடும் சிறு வயது முதலே அவர் நன்கு பழகி வந்­துள்ளார்.

முஸ்­லிம்­க­ளு­டைய மத கலா­சார உணர்­வு­க­ளையும் கட­மை­க­ளையும் அவர் நன்கு உணர்ந்­துள்ளார்.

அது­மட்­டு­மல்ல, தன் ஊரில் இருந்து கொழும்பு வரும் வழியில் தங்­கல்ல, மாத்­தறை, காலி, பேரு­வளை, சீனன்­கோட்டை, பாணந்­துறை, ஹேன­முல்லை முத­லான நக­ரங்­க­ளுக்கு சென்று ஆங்­காங்கு முஸ்­லிம்­களை சந்­தித்து வரு­வது சிறு வயது முதல் ஏற்­ப­டுத்திக் கொண்ட பழக்­க­மாகும்.

இதனை முஸ்­லிம்கள் நன்கு அறிவர்.

ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது கூட தனது நீண்ட நாள் நண்­பரும், அவ­ரு­டைய ஆரம்ப அர­சியல் நுழை­வுக்­காக உத­விக்­கரம் நீட்­டி­ய­வ­ரு­மான ஹுசைன் சாலி ஹாஜியார் வீட்­டுக்கு சென்று சுக­வீ­ன­முற்­றி­ருந்த அவரை பார்த்து குசலம் விசா­ரித்து, குடும்­பத்­த­வர்­க­ளோடும் ஏனைய நண்­பர்­க­ளோடும் மகிழ்ச்­சி­யோடு கலந்­து­ரை­யாடி வந்­ததை அங்­குள்ள முஸ்­லிம்கள் இன்றும் பேசி வரு­கின்­றனர்.

மர்ஹும் பலீல் ஹாஜியார், அல்ஹாஜ் நௌபல் ஜாபிர் போன்ற நண்­பர்­க­ளு­டைய வீட்­டுக்கும் சென்று பழைய கால நட்பின் உயர்­வு­களை மீட்டிக் கொள்­வதில் என்றும் தவ­ற­மாட்டார். இது மஹிந்த ராஜ ­பக் ஷ முஸ்­லிம்கள் சம்­பந்­த­மாக காட்­டி­வரும் நட்பின் உயர்­வினை புடம்­போட்டுக் காட்­டு­கின்­றது.

முஸ்­லிம்­க­ளு­டைய விரோதி என மஹிந்த ராஜபக் ஷவை சிருஷ்­டிப்­ப­தற்கு ரணில் விக்கி­ர­ம­சிங்­கவும் அவ­ரு­டைய பச்சை காற்­சட்­டைக்­கா­ரர்­களும் முயற்­சித்து வரு­வது எதிர்­வரும் தேர்­தலில் அவர்­க­ளுக்கு எதிர்­ப­ல­னைத்தான் அளிக்கும் என்­பதில் எமக்கு சந்­தே­க­ மில்லை.

குரு­நாகல் பெரிய பள்­ளி­வா­சலில் அவர் உரை நிகழ்த்தும் போது, முஸ்­லிம்­க­ளு­டைய உணர்­வு­களை நன்கு அறிந்­துள்ள தான் அவர்­க­ளு­டைய எதிர்­கால சேம­ந­லன்­க­ளுக்­காக உழைக்க தவ­ற­மாட்டேன் என்ற உறு­தி­மொ­ழியை வழங்­கி­யி­ருந்தார் என்­பது மிகவும் வர­வேற்­கத்­தக்­கது. அந்தப் பள்­ளி­வா­சலில் எதிர்­பா­ரா­த­வி­த­மாக நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் கூடி நின்று தக்பீர் முழங்க அவரை வர­வேற்­றது அனை­வ­ரையும் பிர­மிக்கச் செய்த ஒரு சம்­ப­வ­மாகும்.

எனவே, எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு நிச்­சயம் வெற்­றி­பெற்று பிரதமராகப் பதவியேற்க இருக்கின்ற மஹிந்த ராஜபக் ஷவுக்கு இந்நாட்டு முஸ்லிம்களும் தங்களுடைய ஆத ரவை நல்க வேண்டும் எனவும் கூறினார்.

குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் அமைப்பாளர் அப்துல் சத்தார், முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஷ்ஷெய்யத் அலவி மௌலா னாவின் புதல்வர் நகீப் மௌலானா உட்பட இன்னும் சிலரும் உரையாற்றினர்.

Related

இலங்கை 4071368251579262053

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item