மனைவி தற்கொலை! கணவனும் தற்கொலை செய்ய முயற்சி!

இளவாலை பிரான்பற்றைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. சுபாகரன் சுமதி (வயது 24 ) ...


இளவாலை பிரான்பற்றைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

சுபாகரன் சுமதி (வயது 24 ) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

இவரது கணவனை இளவாலை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த நிலையில் குறிந்த பெண் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருதாவது,

வவுனியை சேர்ந்த சுபாகரன் என்பவருக்கும் இளவாலையை சேர்ந்த சுமதி என்ற பெண்ணுக்கு கடந்த எட்டு மாதங்களுக்க முன்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் இளவாலைப் பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் மனைவியின் நகையை அடைவு வைத்தமை தொடர்பில் மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாமியார் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய மருமகன் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையிலேயே குறித்த நபரின் மனைவி இன்று காலை தூக்கிட்டு மரணம் அடைந்துள்ளார்.

அதேவேளை மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுபாகரனுக்கு தெரியவர அவரும் தன்னைத் தானே தாக்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த நபர் ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

உளவு பார்க்கவில்லை: பிரான்ஸ் அதிபரிடம் ஒபாமா விளக்கம்

பிரான்ஸ் நாட்டு அதிபர்களை என்.எஸ்.ஏ. உளவு பார்க்கவில்லை என்றும், எதிர்காலத்திலும் இந்த செயல் நடக்காது என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேயிடம் கூறினார்.விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தொடர்ப...

சீனாவின் சிஞ்ஜியாங்கில் உய்குர் முஸ்லிம்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல்!:18 பேர் பலி

சீனாவின் சிஞ்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை பூர்விக உய்குர் முஸ்லிம்களுக்கும் போலிசாருக்கும் இடையே இவ்வாரம் மூண்ட மோதல்களில் 18 பேர் கொல்லப் பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் மற்றும் போலிஸ் தரப்பால் தகவல் வெள...

Buckingham அரண்மனையை விட்டு வெளியேறும் மகாராணி!

பிரித்தானிய மாகாராணி எலிசபெத் அவர்களின் பக்கிங்ஹாம் அரண்மனையில் பராமரிப்பு வேலைகள் நடைபெறவுள்ளன.சர்வதேச சுற்றுலாப்பயணிகள் பிரித்தானிய வரும்போது பார்க்கவிரும்பும் முக்கிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக பக்கிங...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item