பிரியந்த சிறிசேன கொலையின் பின்னணி குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன கோடரித் தாக்குதலுக்குள்ளாகி இன்று காலை மரணித்துள்ள நிலையில் அவரது கொலை...


கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன கோடரித் தாக்குதலுக்குள்ளாகி இன்று காலை மரணித்துள்ள நிலையில் அவரது கொலையின் பின்னணி குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதியின் இளைய சகோதரரான இவர், பிரதேசத்தில் மணல் அகழ்வு மற்றும் அரிசி வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்ததோடு வெலி ராஜு (மணல் ராஜு) எனவும் அறியப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது கொலையின் சூத்திரதாரியான பொலிசில் சரணடைந்துள்ள டொன் நிஷான் லக்மால் சபுதந்திரி எனும் முழுப் பெயர் கொண்ட 34 வயதான நபர், பிரியந்த சிறிசேன தனது பெற்றோர்களை அவதூறாகப் பேசியதனாலேயே தாக்கியதாக தெரிவித்திருந்தார்

.
ஆயினும், இச்சம்பவத்தின் பின்னணி குறித்து பல்வேறு விதமான ஊகங்கள் வெளியிடப்பட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தனிப்பட்ட விரோதத்தினால் இடம்பெற்ற இக்கொலை விவகாரம் அரசியல் மயப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி குடும்பத்தோடு நெருங்கிய உறவுகளைக் கொண்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருவருக்குமான முரண்பாடின் பின்னணியில் கொலையாளியின் மனைவியும் தொடர்பு படுத்தப்பட்டு ஊகங்கள் வெளியாகியிருக்கும் அதேவேளை இருவருக்குமிடையில் நீண்ட நாட்களாக முரண்பாடுகள் இருந்து வந்ததாகவும் குறித்த பெண் ஏற்கனவே வெளிநாட்டில் வாழ்வதால் இதற்கான சாத்தியக்கூறு இல்லையெனவும் உள்ளூர் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இருவரும் பல காலமாக நண்பர்களாகப் பழகி வந்வர்கள் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமையும் இருவருக்குமிடையிலான வேறு முரண்பாடுகளும் இருந்து வந்த நிலையில் சம்பவ தினம் கொலையாளியின் பெற்றோரோடு பிரியந்த சிறிசேன உரையாடியள்ளமையும் அதேவேளை தன் பெற்றோரை சிறிசேன அவதூறாக பேசியதாக கொலையாளி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

மகிந்தவினால் முடியாத காரியத்தை முடித்த மைத்திரி!

இலங்கையில் க்லைபொசேட் என்ற களை நாசினியை இறக்குமதி செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ இன்று முதல் முற்றாகத் தடை விதித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதே...

யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், துணை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம், ப...

மத்திய வங்கி மோசடியினை அம்பலப்படுத்திய ரணில்

மத்திய வங்கியின் திறைசேரி முறிகளில் 10 மில்லியன் மாத்திரமின்றி சுமார் 2700 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ச...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item