மஹிந்த தோல்வி அடைவார் என முன்னரே எச்சரித்த அமைச்சர்!
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைவார் என ஆதாரபூர்வமாக தான் எடுத்துக்கூறியதாக அமைச்சர் ரெஜினொல்ட் குரே தெரிவித்துள்ளார். எனினும் அ...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_174.html
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைவார் என ஆதாரபூர்வமாக தான் எடுத்துக்கூறியதாக அமைச்சர் ரெஜினொல்ட் குரே தெரிவித்துள்ளார்.
எனினும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த தோல்வியடைவார் என நிச்சயமாக தெரிந்திருந்தும் நான் அவருடன் இணைந்திருந்து பிரச்சாரம் செய்தேன்.
ஏனெனில், கீழ் மட்ட மக்கள் கட்சியை விட்டு வெளியேற வேண்டாம் என என்னிடம் விடுத்த கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் இவ்வாறு செய்தேன்.
கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து சில காலங்களாகவே நான் சுட்டிக்காட்டியிருந்தேன். எனினும், ஆட்சியாளர்கள் அதனை திருத்திக் கொள்ள எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.